அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாக ஸ்புட்னிக் வி தடுப்பூசி!

அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாக ஸ்புட்னிக் வி தடுப்பூசி!

ம் நாட்டில் கொரோனாவுக்கு எதிரான போரில் தற்போது கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு உள்நாட்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கிடையில், ரஷ்ய தடுப்பூசியான ஸ்பூட்னிக் வி, தனியார் மருத்துவமனைகளில் மட்டும் கிடைக்கிறது. ஆனால் விரைவில் மக்களுக்கு அரசு தடுப்பூசி மையங்களிலும் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தடுப்பூசி மையத்தில் மக்களுக்கு இலவசமாக ஸ்பூட்னிக் தடுப்பூசி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் விநியோகத்தை அதிகரிக்கவும் விரைவில், இலவச தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்பூட்னிக் வி இருக்கும் என்றும் அரசு கொரோனா செயற்குழுவின் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தடுப்பூசியான ஸ்பூட்னிக்கை சேமிப்பதில் சிக்கல் உள்ளது. அதை பாதுகாக்க, மைனஸ் 18 டிகிரி வெப்பநிலை தேவைப்படுகிறது. போலியோ தடுப்பூசிக்காக குளிர் சங்கிலி ஏற்பாடு செய்யப்பட்டது போல, ஸ்பூட்னிக் சேமிப்பும் அதே வழிகளில் செய்யப்படும் என்று கூறியுள்ள டாக்டர் அரோரா, அதே நேரத்தில், கிராமப்புறங்களிலும் இந்த தடுப்பூசிக்கான அணுகல் உறுதி செய்யப்படும் என்றார்.

தடுப்பூசி செலுத்தும் வேகத்தில் ஏற்பட்டுள்ள தடை குறித்து கூறுகையில், வரும் நாட்களில் மீண்டும் இந்த பணி விரைவுபடுத்தப்படும். இதுவரை 35 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன என்றும், ஜூலை மாதத்திற்குள் 12 முதல் 16 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்றும் கூறினார். தினமும் ஒரு கோடி தடுப்பூசி டோஸ்களை போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!