சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்: இன்று தொடக்கம்!

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்: இன்று தொடக்கம்!

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் ஹன்ட்ரட் (hundread)டென்னிஸ் தொடர் இன்று தொடங்க உள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் நடைபெறும் போட்டிகள் வருகிற 11ம் தேதி வரை நடைபெறவுள்ளன. 10க்கும் மேற்பட்ட உலக நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளனர்.0க்கும் மேற்பட்ட உலக நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளனர். ராம்குமார் ராமநாதன், முகுந்த் சசிகுமார், சுமித் நாகல் உள்ளிட்ட இந்திய வீரர்களும் இதில் பங்கேற்கின்றனர். சென்னையில் டென்னிஸ் போட்டி நடைபெற இருப்பது, டென்னிஸ் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக தேசிய அளவிலான போட்டிகள் மட்டுமின்றி உலக அளவிலான பல்வேறு போட்டிகளும் சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. டபுள்யூடிஏ பெண்கள், ஏடிபி ஆண்கள் டென்னிஸ் போட்டிகள் 2022, 2023ல் சென்னையில் நடந்தன. இந்நிலையில் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து ஏடிபி சேலஞ்சர் ஆண்கள் டென்னிஸ் போட்டியை நடத்துகிறது. நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கில் இன்று தொடங்கும் இப்போட்டியின் ஒற்றையர் பிரிவில் 32 வீரர்கள், இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகள் களமிறங்குகின்றனர். இந்தியா, இத்தாலி, உக்ரைன், ஸ்பெயின், செக் குடியரசு, துனிசியா, ஹாங்காங், சீன தைபே, போலந்து என 14 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச வீரர்கள் பங்கேற்கின்றனர். முதல் நாளான இன்று தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதன்மைச் சுற்றின் முதல் சுற்று ஆட்டம் நாளை நடக்கும். இறுதிப் போட்டி பிப்.11ம் தேதி நடக்க உள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் ஆண்டுதோறும் சர்வதேச டென்னிஸ் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஓபன் சேலஞ்சர் போட்டிகள் 1996, 2018, 2019, 2023 ஆகிய நான்கு ஆண்டுகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது 5வது ஆண்டாக போட்டிகள் நடைபெறவுள்ளன. ஒந்த ‘ஓபன் ஏடிபி சேலஞ்சர் 100’ சர்வதேச போட்டியில், 14 நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்கிறார்கள். தற்போது, இத்தாலியைச் சேர்ந்த 20 வயதான லுகா நாரிடி, இந்தப் போட்டியின் முதல் நிலை வீரராக இருக்கிறார். இந்தியாவில் நடைபெறும் ’ஏடிபி சேலஞ்சர் 100’ தொடர்களில் சென்னையில் நடைபெறுவது முதல் போட்டியாகும். அதைத் தொடர்ந்து பெங்களூரு, புனே, டெல்லியில் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த போட்டியை ரசிகர்கள் இலவசமாக கண்டு களிக்கலாம். பிப்.4ஆம் தேதி தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெறும். முதன்மைச் சுற்று நாளை பிப்ரவரி 5-ஆம் தேதி (திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி ஆட்டம் முடியும் வரை மின்னொளியில் நடைபெறும். பிப்ரவரி 10-ஆம் தேதி சனிக்கிழமை இரட்டையர் இறுதிப் போட்டியும், பிப்ரவரி 11 அன்றான ஞாயிற்றுக்கிழமை ஒற்றையர் இறுதிப் போட்டியும் நடக்கிறது.

இந்த போட்டி குறித்து தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் விஜய் அமிர்தராஜ் கூறுகையில், “சோகள் போபண்ணா இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரராகவும், அதே நேரத்தில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் வென்றுள்ளார். இதற்காக தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பாக அவரை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு இது அற்புதமான சாதனையாகும். 43 வயதில் கிடைத்துள்ளது என்பது இன்னும் பாராட்டத்தக்கது. 2006ஆம் ஆண்டில் சென்னை ஒபனில் பிரகாஷ் அமிர்தராஜுடன் இணைந்து, தனது முதல் ஏடிபி இறுதிப் போட்டியை எட்டியபோது, ரோகளின் உச்சத்திற்கான பயணம் தொடங்கியது.

ஏடிபி சேலஞ்சர் போன்ற சர்வதேச போட்டிகளை நடத்துவதன் மூலம், இந்திய வீரர்கள் உலக அரங்கில் சிறப்பாக செயல்படுவதற்கு இது மீண்டும் ஒரு வாய்ப்பாக அமைகிறது. இது போன்ற உலகத்தரம் வாய்ந்த போட்டிகளை நடத்துவதன் மூலம், இந்திய மற்றும் தமிழக வீரர்களுக்கு சர்வதேச தளத்தை அளிப்பதைத் தவிர, இந்த முடிவுகள் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்துக்கு ஒரு புதிய வீரர் மேம்பாடுத் திட்டத்தை தொடங்குவதற்கு மேலும் ஊக்கப்படுத்தியுள்ளன” என அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!