32°C
விளம்பரம்
Advertisement

ஆய்வு முடிவுகள்

இந்தியாவில் இளைஞர்கள் ’குடி’க்கு அடிமையாகும் போக்கு 3 மடங்காக அதிகரிப்பு Running News

இந்தியாவில் இளைஞர்கள் ’குடி’க்கு அடிமையாகும் போக்கு 3 மடங்காக அதிகரிப்பு

இந்தியாவில் மது போதைக்கு இளைஞர்கள் அடிமையாவது 3 மடங்காக அதிகரித்துள்ளது என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இது குறித்து அமெரிக்காவின் கொலம்பியா பல்கலை கழகத்தின் பொது சுகாதார பிரிவை சேர்ந்த ஆய்வாளர்கள் இந்திய வமசாவளியை சேர்ந்த அரவிந்த் என்பவரது தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்பு குறித்து அவர் கூறுகையில், கடந்த 1956-1960ம் ஆண்டிற்கு உட்பட்ட காலத்தில் மதுவுக்கு அடிமையானவர்கள் 19.5 சதவீதமாக இருந்தனர். இந்த விகிதாச்சாரம் 1981-85ம் ஆண்டிற்கு உட்பட்ட காலத்தில் பிறந்த இளைஞர்களிடையே 74.3 […]

August 7, 2014 admin
ஒரு மரம் வளர்த்தால்  850 மனிதர்களை காப்பாற்றலாம்! அமெரிக்கா ஆய்வில் தகவல் Running News

ஒரு மரம் வளர்த்தால் 850 மனிதர்களை காப்பாற்றலாம்! அமெரிக்கா ஆய்வில் தகவல்

மரங்கள் உணவைத் தருகின்றன. காய், கனி, கீரை வகைகள் போன்றவை மனிதனுக்கும், விலங்குகளுக்கும் கிடைக்கும் இயற்கைக் கொடை. மரங்கள் மட்டுமே உலகில் சுயமான உணவைத் தயாரிக்கும் திறனைப் பெற்றுள்ளன. நச்சு வாயுவை உட்கொள்வதும், பிராண வாயுவை வெளி விடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று. மரங்கள் மழையைத் தருகின்றன. மேலும் ஒரு ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம் பல லட்சம் ரூபாய் சொத்துக்குச் சமமான நன்மைகளைத் தருகிறது. ரூ. 5.30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வெளியிடுகிறது. ரூ. […]

July 29, 2014 admin
கிலியைக் கொடுக்கும் ஒலி மாசு! Running News

கிலியைக் கொடுக்கும் ஒலி மாசு!

சமீப காலமாக சென்னையில் கட்டுப்படுத்த முடியாதளவுக்கு வாகனங்களின் ஒலி மாசு அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களிடம் கவலையையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.ஒலி மாசுபாட்டால் உயர் ரத்தஅழுத்தம், படபடப்பு, காது கேட்கும்தன்மை போன்ற எல்லோரும் அறிந்த உடனடி பாதிப்புகள் மட்டுமில்லாமல் இன்சோம்னியா என்ற தூக்கமின்மை, குடல் அழற்சி, சிறுநீரகக் கோளாறுகள் போன்ற நீண்டகால உடல் உபாதைகளும் நமக்கு ஏற்படலாம். சென்னையில் சுமார் 37.6 லட்சம் வாகனங்கள் உள்ளன. இதில், 30,52,233 இரு சக்கர வாகனங்கள் இருக்கின்றன. தினமும் சுமார் 800 […]

July 1, 2014 admin
பேஸ்புக் ட்விட்டரில் 73% இந்திய மைனர்கள்! அசோசேம் ஆய்வில் அதிர்ச்சி! Running News

பேஸ்புக் ட்விட்டரில் 73% இந்திய மைனர்கள்! அசோசேம் ஆய்வில் அதிர்ச்சி!

கடந்த ஆண்டே மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு புள்ளி விவரத்தில், “சிறார்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவது சமீப காலமாக மிகவும் அதிகரித்துள்ளது.10க்கு 8 குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி, சோகம், பாராட்டு போன்றவற்றை பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள இயலாத நிலையில் ஏங்கி தவிக்கின்றனர். இதுபோல பாதிக்கப்படும் குழந்தைகளில் பலர் சமூக வலைதளங்கள் மற்றும் இணைய தளங்களை பார்க்கின்றனர் எனவும் அதுவும் இப்போது பெரும்பாலான சிறுவர்கள் தங்களது பெற்றோரின் உதவியுடன் இத்தகைய சமூக வலைத்தளங்களில் கணக்குகள் […]

May 10, 2014 admin
இந்தியாவில்தான் கொத்தடிமைகள் அதிகம்! Running News

இந்தியாவில்தான் கொத்தடிமைகள் அதிகம்!

நம் நாடு சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகளாகியும் இன்று வரை கொத்தடிமை முறை ஒழிக்கப்படாமல்தான் உள்ளது. இதற்காகவே 1976ல் கொத்தடிமை ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் கொண்டு வரப்பட்டு 37 ஆண்டுகளாகியும் இதுவரை குறைவான கொத்தடிமைகளே மீட்கப்பட்டனர். குறிப்பாக கடந்த ஆண்டு வரை தேசிய அளவில் 3 லட்சம் பேரும், தமிழக அளவில் 3 லட்சம் பேரும் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் மட்டும் 1.4 கோடி பேர் அடிமை நிலைகளிலும், கடனை அடைப்பதற்காக கொத்தடிமைகளாகவும், […]

October 18, 2013 admin
கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என்பதுதான் உண்மை! ஆய்வு முடிவுகள்

கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என்பதுதான் உண்மை!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இருக்கும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் 285 ஏக்கர் நிலப் பரப்பிலான ஒரு சிறிய தீவு கச்சத்தீவு. எந்தவித உயிரினங்களும், குடியிருப்புகளும் இல்லாமல் சிறிய கற்குன்றங்களாலான இந்த தீவுப் பகுதி இந்தியாவின் கடற்கரைக்கு 10 மைல் தூரத்திலும் ஸ்ரீலங்காவின் கடற்கரைக்கு 8 மைல் தூரத்திலும் அமைந்துள்ளது. இன்றைய நிலைமையில் “கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்துவிட்டது; அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழக மீனவர்கள்’ எனும் சர்ச்சை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, இப் பிரச்னை ஒரு […]

September 24, 2013 admin
தமிழ் சினிமா நலம் பெற பிரார்த்தனை க்ளப் ஆரம்பிப்போமா? By  இரா. ரவி ஷங்கர் ஆய்வு முடிவுகள்

தமிழ் சினிமா நலம் பெற பிரார்த்தனை க்ளப் ஆரம்பிப்போமா? By இரா. ரவி ஷங்கர்

கலர்ஃபுல்லான நட்த்திரங்களின் கவர்ச்சி படையெடுப்பு. கிளுகிளுப்பான கலை நிகழ்ச்சிகள், ஸ்கர்ட் கழன்று விழுந்துப் போகுமளவுக்கு ஆக்ரோஷமான பெர்ஃபார்மன்ஸ், நட்சத்திரங்கள் எல்லோரும் ;உள்ளேன் அம்மா’ என்று கட்டாயமாக அட்டடெண்ட்ஸ் கொடுக்கவேண்டுமென்பதற்கு வசதியாக, தென்னிந்திய சினிமா ஷூட்டிங்களுக்கு ஒரு வார தற்காலிக வீ.ஆர். எஸ் விடுப்பு என இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் எக்ஸ்டஸி உலகத்தின் உள்ளே நுழைந்தது போல செம பீக்கில் இருக்கிறது. சபாஷ்!!! அப்படியே நம்முடைய நேச்சுரல் கேமராவான கண்களை கொஞ்சம் ஃபாஸ்ட் பேன்னிங்கில் திருப்பினால், […]

September 23, 2013 admin
“சிறியதே சிறப்பானது:அதுமட்டுமின்றி பிரிவினை என்பது பகைமையல்ல”! ஆய்வு முடிவுகள்

“சிறியதே சிறப்பானது:அதுமட்டுமின்றி பிரிவினை என்பது பகைமையல்ல”!

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் பல பகுதிகள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு ஒரு தேசமாக உருவாக்கப்பட்டது. அப் பெரிய தேசத்தில் சுதந்திரம் பெற்றபோது 562 சமஸ்தானங்களும் 5 பிரெஞ்சு பகுதிகளும் 3 போர்த்துக்கீசிய பகுதிகளும் இருந்தன. 1956-ஆம் ஆண்டில் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. அப்போது பதினான்கு மாநிலங்கள், ஆறு யூனியன் பிரதேசங்கள் இருந்தன. அதில் ஆந்திரப் பிரதேசம் நான்காவது பெரிய மாநிலம். மக்கள்தொகையில் அதற்கு ஐந்தாவது இடம். 970 கிலோ மீட்டர் நீளமான கடற்கரையைக் கொண்டது. இந்தி மொழிக்கு அடுத்தபடியாக […]

September 20, 2013 admin
‘அந்த’ நேரத்தில் கூட மெயில் செக் பண்ணும் பெண்கள்!- அதிர வைக்கும் சர்வே ரிசல்ட்! ஆய்வு முடிவுகள்

‘அந்த’ நேரத்தில் கூட மெயில் செக் பண்ணும் பெண்கள்!- அதிர வைக்கும் சர்வே ரிசல்ட்!

தாம்பத்ய சுகம் என்பது பிறவியிலேயே அனைவருக்கும் தெரிந்த ஒன்றல்ல. கற்றுக் கொள்வதில்தான் அதன் முழு இன்பமும் கை கூடும். செக்ஸ் பற்றியும் அதனை எப்படியெல்லாம் அனுபவிக்கலாம் என்பதும் பற்றிய அடிப்படை அறிவைப் பெற வேண்டியது இரு பாலாருக்கும் அவசியம். தாம்பத்ய சுகத்திற்கான உணர்வுகளை எதிர்பார்ப்பது மட்டுமல்ல, அதை நாம் நமது பார்ட்னருக்குத் தருவதிலும் முழுமையாக இருக்க வேண்டும். ஆனால் ஆண்களுக்குக் கிடைப்பது போன்ற எக்ஸ்போசர்கள் பெண்களுக்குக் கிடைப்பதில்லை என்பதும், வெளிப்படையாக இதுகுறித்து யாரிடம் விளக்கம் பெறலாம் என்பதில் […]

September 16, 2013 admin
வன்முறை எண்ணத்தை தூண்டுமோ வானிலை மாற்றம்? ஆய்வு முடிவுகள்

வன்முறை எண்ணத்தை தூண்டுமோ வானிலை மாற்றம்?

அண்மையில், பர்க்லியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த எட்வர்ட் மிகுவல் என்ற விஞ்ஞானியின் தலைமையிலான ஆய்வர் குழு, “வளிமண்டல வெப்பநிலை உயர்வு, மனிதர்களின் நரம்பு சார்ந்த உடற்செயலியல் நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி, உலகில் போர் நிகழும் வாய்ப்புகளை அதிகமாக்கும்’ என்று கூறுகிறது.ஆம், வளி மண்டலத்தில் கரியமில வாயு போன்ற பசுங்குடில் வாயுக்கள் நிறைவதால் உலகளாவிய சூழல் வெப்பநிலை அதிகரித்து பல வகையான விபரீத விளைவுகளை உருவாக்கும். சாதாரணமாகவே கோடை காலத்தில் வெயில் சுட்டெரிக்கிறபோது அல்லது அலுவலக அறையில் […]

September 14, 2013 admin
உடனடி செய்திகள்