32°C
விளம்பரம்

அலசல்

காமன்வெல்த் மாநாடும்  இந்தியாவும் – 1 Running News

காமன்வெல்த் மாநாடும் இந்தியாவும் – 1

இந்தியா 1947 ஆகஸ்டு 15இல் விடுதலை பெற்றது. அரசமைப்புப் பேரவை 1946 டிசம்பரில் தொடங்கி, 1950 டிசம்பர் 26இல் அரசமைப்புச் சட்டத்தைத் தந்தது. அதுவரை, சட்டப்படி, ஆங்கில ஏகாதிபத்தியக் காமன்வெல்த்திற்கு உட்பட்ட ஒரு பகுதியாகத்தான் இந்தியா இருந்தது.1949 ஏப்ரல் 27இல் லண்டனில் கூடிய காமன்வெல்த் பிரதமர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் ஜவாஹர்லால் நேரு சுதந்திர இந்தியா காமன்வெல்த் அமைப்பில் சேருவது குறித்து சில வரைமுறைகளை வற்புறுத்தினார். லண்டன் காமல்வெல்த் பிரதமர்கள் மாநாடு முடிவடைந்ததும், இந்தியாவில் நேரு வெளியிட்ட […]

November 18, 2013 admin
கழிவுகளை அழித்து மனித குலத்தை காப்போம்! Running News

கழிவுகளை அழித்து மனித குலத்தை காப்போம்!

கழிவு என்பது எல்லா இடங்களிலும் எல்லோராலும் உருவாக்கப்படுவதே. நகரங்களில் மீதமாகும் கழிவுகளுக்கு வடிகாலாக கிராமங்களை மாற்றிவிடுவது என்பது இயற்கையின் சமநிலையை பாதிக்கும் முக்கிய விஷயங்களில் ஒன்றாகும்.தற்போது வேகமாக மாறிவரும் கலாசார மாற்றங்களினால் புதியன புகுதலும் பழையன கழிதலும் சாதாரணமான நிகழ்வு என்றாலும்கூட பழையவற்றை சுற்றுச்சூழல் மாசுபடாமல் கழிப்பதை மனித சமுதாயம் கற்றுக்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் சுற்றுச்சூழல் மிகப்பெரிய பாடத்தை நமக்கு கற்றுக்கொடுக்கும். முந்தைய காலங்களில் கழிவுகளை ஒரு குழி வெட்டி அதில் கொட்டி அது மக்கியபின் விவசாயத்திற்குப் […]

November 15, 2013 admin
அரசிடம் முனைப்பும், பொதுமக்களிடம் பொறுப்புணர்வும் இருந்தால் போதும் குப்பையும் காசாகும்! Running News

அரசிடம் முனைப்பும், பொதுமக்களிடம் பொறுப்புணர்வும் இருந்தால் போதும் குப்பையும் காசாகும்!

இன்னும் பத்து ஆண்டுகளில் இந்தியாவின் நகரவாசிகள் தொகை 60 கோடியாகவும் அவர்கள் ஒரு நாளில் கழிக்கும் குப்பை ஆறு லட்சம் டன்னாகவும் உயரும் என ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. நகரங்களில் நிலத்தின் விலை வானளாவ உயர்ந்து விட்டது. நகராட்சிகளுக்குக் குப்பை கொட்ட இடம் கிடைக்கவில்லை. அடுத்த ஊரில் கொண்டு போய்க் கொட்ட நினைத்தால் அந்த ஊர்க்காரர்கள் ஒன்றுகூடிச் சண்டைக்கு வருகிறார்கள். மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் வேறு அவ்வப்போது ஏதாவது குறை சொல்லிக் கொண்டேயிருக்கின்றன. இதன் காரணமாகப் பல […]

November 11, 2013 admin
பலவீனமான வெளியுறவுக் கொள்கை! Running News

பலவீனமான வெளியுறவுக் கொள்கை!

நமது நாட்டின் நலன்களுக்கு உகந்த உலகளாவிய சூழலை உருவாக்குவதுதான் இந்திய வெளியுறவுக் கொள்கையின் மிக முக்கியமான ஒரே நோக்கம்’ என்று தில்லியில் அண்மையில் தொடங்கிய பிற நாடுகளுக்கான இந்தியத் தூதர்கள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியுள்ளார். ஆனால், அவருடைய ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் நமது வெளியுறவுக் கொள்கையானது மிகவும் பலவீனமாகவும், நமது நாட்டின் நலன்களுக்கு எதிராகவும்தான் மாறியுள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை. அணுசக்தி ஒப்பந்தம், சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு, தொலைத்தொடர்புத் துறையில் அன்னிய […]

November 9, 2013 admin
தாய்மொழி வழிக் கல்வி என்பதே கூட ஒரு அறிவியல் கண்ணோட்டம்தான்.! Running News

தாய்மொழி வழிக் கல்வி என்பதே கூட ஒரு அறிவியல் கண்ணோட்டம்தான்.!

மனித சமுதாய வளர்ச்சியின் அடிப்படையே, தெரியாத உண்மைகளைத் தெரிந்துகொள்ளும் முனைப்புதான். ஆதிமனிதர்கள் இயற்கையின் ரகசியங்களைக் கண்டறிந்து அடுத்த தலைமுறைக்கு வழங்கினார்கள். நமது முன்னோர்களது கண்டுபிடிப்புகளின் பலன்களை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அடுத்த தலைமுறைக்கு நமது கண்டுபிடிப்புகளின் பலன்களைத் தருவது நமது கடமை. இந்தத் தொடர்ச்சி அறுந்துவிடக்கூடாது. நமது நாட்டில் மதங்களும் சாதிகளும் பகுத்தறிவுக்குப் பொருந்தாத நம்பிக்கைகளும் மனித முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு, அவ்வப்போது அந்தத் தொடர்ச்சியை அறுத்துவிட்டுள்ளன. நாட்டில் வறுமையும் பிணியும் கல்லாமையும் தொடர்கிற நிலையில், 450 கோடி […]

November 8, 2013 admin
உலக அளவில் பெரிய நிர்வாகச் சீர்கேடுடைய பொது விநியோகத் திட்டம! Running News

உலக அளவில் பெரிய நிர்வாகச் சீர்கேடுடைய பொது விநியோகத் திட்டம!

தனது மக்களுக்குத் தேவையான அளவு உணவை வழங்காத நாடு எனப் பெயர் பெற்றது இந்தியா. எஃப்.ஏ.ஓ. எனப்படும் உணவு மற்றும் விவசாய இயக்கம் தனது 2006-ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் இந்தியாவில் 21 கோடியே 20 லட்சம் மக்கள் தரமான உணவை பெறவில்லை என்ற தகவலை வெளியிட்டுள்ளது. நமது நாட்டில் பல வருடங்களாக பொது வினியோகத் திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கும் நடைமுறை இருந்தபோதிலும், அந்த திட்டம் சரியான முறையில் நிர்வகிக்கப்படாததால், பல முறைகேடுகள் […]

November 4, 2013 admin
மூன்றாவது அணியால்தான் மூன்று தேர்தல்கள் அடுத்தடுத்து நடந்தன! Running News

மூன்றாவது அணியால்தான் மூன்று தேர்தல்கள் அடுத்தடுத்து நடந்தன!

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் அரசியல் சதுரங்கத்தில் சாமர்த்தியமாக காய்களை நகர்த்தும் காரியத்தில் ஈடுபட்டுவருகின்றன. நரேந்திர மோடி பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டதும் வகுப்புவாத எதிர்ப்பு வேள்வியில் தங்கள் வாழ்க்கையை முற்றாக அர்ப்பணித்துவிட்டவர்கள் சிறுபான்மையினர் நலன் காக்க நவீன குருúக்ஷத்திரத்தில் வந்து குவிந்துவிட்டனர். ஒரு பக்கம் “மதச்சார்பின்மை’ என்ற மந்திரகோலை மகிழ்ச்சியுடன் காங்கிரஸ் கையில் பிடித்துக் கொண்டது. மறுபக்கம் வகுப்பு வெறியை வளர்த்தெடுக்கும் சக்திகளை முறியடிக்க நம் காம்ரேடுகள் சுத்தியலும் அரிவாளும் சுமந்தபடி […]

November 3, 2013 admin
படேல் பாஜக-வின் சொத்தும இல்லை..காங்கிரஸின் எதிரியும் அல்ல!. Running News

படேல் பாஜக-வின் சொத்தும இல்லை..காங்கிரஸின் எதிரியும் அல்ல!.

இப்போது சர்தார் வல்லபபாய் படேல் தலை உருளுகிறது.”படேல் பிரதமராக பதவியேற்றிருந்தால், நேருவைவிட சிறப்பாக செயல்பட்டிருப்பார்’ என்று மோடி பேசியிருப்பது இன்றைய அரசியல் சூட்டில் புதிதாக மிளிர்கிறதே தவிர, இது 1950 களிலேயே, அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், தொழிலதிபர் ஜே.ஆர்.டி. டாடா உள்பட பலர் கூறிய கருத்துதான். அதேயே இப்போது நரேந்திர மோடியும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்றைய அரசியல் மேடையில் அது மதிப்பூட்டல் பெறுகிறது. இந்த வார்த்தைகளை நரேந்திர மோடி வேறு ஏதேனும் ஒரு மேடையில் […]

November 1, 2013 admin
சுண்டெலியின் மிரட்டலுக்கு அஞ்சி பெரிய யானை பதுங்குவதா? Running News

சுண்டெலியின் மிரட்டலுக்கு அஞ்சி பெரிய யானை பதுங்குவதா?

காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டைப் புறக்கணிக்கும் நாடுகள் அந்த அமைப்பிலிருந்து தனிமைப்படுத்திக் கொள்வதாகக் கருதப்படும். இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்காவிட்டால் அதனால் யாருக்கு பாதிப்பு என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்’ என புது தில்லியில் உள்ள இலங்கைத் தூதர் கரியவாசம் எச்சரித்திருக்கிறார்.அதாவது இந்தியா தனிமைப்படுத்தப்படும் எனவும் இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் எனவும் மிரட்டும் அளவுக்கு அவர் சென்றிருக்கிறார். ஒரு நாட்டின் தூதர் எந்த வரம்பிற்கு உட்பட்டுப் பேச வேண்டுமோ அந்த வரம்பைத் தாண்டி அவர் பேசியுள்ளார். இந்தியாவின் தலைநகரிலேயே […]

October 31, 2013 admin
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி,வஞ்சனை சொல்வாரடீ!- Running News

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி,வஞ்சனை சொல்வாரடீ!-

அடுத்த ஆண்டு இந்தியாவின் பதினாறாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அனைத்துக் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. கடந்த ஒன்பது ஆண்டுகளாக மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் காங்கிரசும் பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதாவும் மற்ற கட்சிகளைவிட அதிக முனைப்புடன் தயாராகிக் கொண்டிருக்கின்றன. பிரதமர் வேட்பாளராக, நேரு குடும்ப வாரிசான ராகுல் காந்தியை முன்னிலைப்படுத்த முனைகிறது ஆளுங்கட்சியான காங்கிரஸ். தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆண்டு வரும் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சியில், சுதந்திரம் […]

October 30, 2013 admin
உடனடி செய்திகள்