உதவித்தொகையுடன் கல்வெட்டியல், தொல்லியல் படிப்புகளுக்கு விண்ணப்பம் தொடக்கம்!

உதவித்தொகையுடன்  கல்வெட்டியல், தொல்லியல் படிப்புகளுக்கு விண்ணப்பம் தொடக்கம்!

மிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் வழங்கப்படும் தொல்லியல், கல்வெட்டியியல் உள்ளிட்ட முதுகலை டிப்ளமோ படிப்புகளுக்கு 2025 – ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். வரும் ஜூலை 14-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

தமிழ்நாடு தொல்லியல் படிப்புகள்

தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் மூலம் இப்படிப்புகள் யுஜிசி-யின் அங்கீகாரம் பெற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

தொல்லியல் முதுகலை டிப்ளமோ (2 ஆண்டுகள்)

கல்வெட்டியல் முதுகலை டிப்ளமோ ( 2 ஆண்டுகள்)

மரபு மேலாண்மை மற்றும் அருங்காட்சியகவியல் முதுகலை டிப்ளமோ (2 ஆண்டுகள்)

சுவடியியல் முதுகலை பட்டயப் படிப்பு (1 ஆண்டு)

தகுதிகள்

தொல்லியல் முதுகலை டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கல்வெட்டியல் முதுகலை டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் தமிழ், இந்திய வரலாறு, பண்டைய வரலாறு, தொல்லிய வரலாறு ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

மரபு மேலாண்மை மற்றும் அருங்காட்சியகவியல் படிப்பிற்கு பொறியியல், மானுடவியல், சமூகவியல், வேதியியல், இயற்பியல், உயிரியல், ஜியாலஜி ஆகியவற்றில் முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
1 ஆண்டு சுவடியியல் படிப்பிற்கு தமிழ் பாடத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மாதம் ரூ.5,000 உதவித்தொகை

தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் மூலம் வழங்கப்படும் முதுகலை டிப்ளமோ படிப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டு, சேர்க்கை வழங்கப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும்.

இந்திய தொல்லியல், அகழாய்வு, வரலாறு, மரவு, சங்க கால அரசியல், இலக்கியம், வாழ்வியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொருளாதாரம், கட்டடக்கலை ஆகியவற்றை குறித்தும், அருங்காட்சியம் அமைப்பு, பாதுகாப்பு, நாணயங்கள், பராமரிப்பு உள்ளிட்டவை பற்றியும் கற்பிக்கப்படும். மேலும், மாணவர்கள் அகழாய்வு இடங்களில் நேரடியாக சென்று கற்பிக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை தேர்வு ஆகியவற்றில் அடிப்படையில் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

தொல்லியல் சார்ந்த இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மாண்வர்கள் http://www.tnarch.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான கல்வித்தகுதி மற்றும் இதர சான்றிதழ்களை இணைத்து அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

ஆணையம்,
தொல்லியல் துறை,
தமிழ் வளர்ச்சி வளாகம்,
தமிழ் சாலை,
எழும்பூர்,
சென்னை – 600 008.

முதுகலை டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து மாணவர்கள் நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். 2025-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 20-ம் தேதி நடைபெற உள்ளது.

முக்கிய நாட்கள்

விண்ணப்பிக்க கடைசி நாள் 14.07.2025

நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு 20.07.2025

தொல்லியல் துறை மீது ஆர்வமுள்ளார்கள் இப்படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம். தமிழ்நாடு அரசே ஏற்படுத்தி தரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் மாணவர்களுக்கு மாத உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. தொல்லியல் துறை, அருங்காட்சியம் ஆகியவற்றில் பணி வாய்ப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பாகும்.

மேலும் இதுதொடர்பான கூடுதல் விவரங்களை 044-2819 0023 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Related Posts