கண்டக்டர், டிரைவர் வேலை தேடுவோர் எல்லாம் வாங்க!

கண்டக்டர், டிரைவர் வேலை தேடுவோர் எல்லாம் வாங்க!

மிழ்நாட்டில் 8 அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு கொண்டு இருக்கின்றன. இதில் சுமார் 1.13 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாடு மாவட்டங்களுக்கு மட்டுமில்லாமல், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், பெண்களுக்கு இலவசமாக பேருந்து வசதியும் அறிமுகப்படுத்த செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இது போன்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கீழ் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, பல்வேறு பகுதிகளில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள் நியமிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அரசாணை வெளியீடு

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2,877 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதில் ஓட்டுநர் நடத்துனர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் 2340 டிசிசி பணியாளர்கள் மற்றும் 537 தொழில்நுட்ப பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பபடும் என தெரிவிக்கப்பட்டது. இதில் 307 டிசிசி மற்றும் 462 தொழில்நுட்ப பணியாளர்கள் என மொத்தம் 769 காலியிடங்கள் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீதமுள்ள 2,108 பணியிடங்கள் மற்ற பிரிவினர்களுக்கு கொண்டு நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.

காலிப்பணியிடங்களின் விவரங்கள்

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் – 364 பணியிடங்கள்
மாநில அரசு விரைவு போக்குவரத்து (தமிழ்நாடு) கழகம் – 318 பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) – 322 பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) – 756 பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (சேலம்) – 486 பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோயம்புத்தூர்) – 344 பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (மதுரை) – 322 பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (திருநெல்வேலி) – 362 பணியிடங்கள்
மொத்தம் 3,274 ஓட்டுநர் உடன் கொண்ட நடத்துநர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

வயது வரம்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 3,274 பணியிடங்களுக்கு 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். அதிகபடியாக ஒசி (OC) பிரிவை சேர்ந்தவர்கள் 40 வயதைக் கடந்திருக்கக்கூடாது. பிசி, எம்பிசி, டிசி, எஸ்சி மற்றும் எஸ்டி (BC/MBC/DNC/SC/ST) பிரிவை சேர்ந்தவர்கள் 45 வயதைக் கடந்திருக்கக்கூடாது.

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு – ஒசி பிரிவை சேர்ந்தவர்கள் அதிகபடியாக 50 வயதைக் கடந்திருக்கக்கூடாது. பிசி, எம்பிசி, டிசி, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் 55 வயதைக் கடந்திருக்கக்கூடாது.

கல்வித்தகுதி

இப்பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழில் எழுதப் படிக்க பேச தெரிந்திருக்க வேண்டும். கனரக வாகனத்திற்கான ஓட்டுநர் உரிமம் கட்டாயமாக தேவை. மேலும், குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் பெற்றிருக்க வேண்டும். முதலுதவி சான்றிதழ், பேட்ஜ் மற்றும் நடத்துநர் லைசன் ஆகியவை 01.01.2025 தேதியின் அல்லது அதற்கு முன்பு பெற்றிருக்க வேண்டும்.

சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களுக்கு குறைந்தபட்சம் வயது 24 மற்றும் 18 மாத அனுபவம் தேவை என்ற நெறிமுறை பொருந்தாது.

உடற்தகுதி

ஓட்டுநர் உடன் கொண்ட நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் குறைந்தபட்சம் 50 கிலோ எடை இருக்க வேண்டும். உயரம் குறைந்தபட்சம் 160 செ.மீ இருக்க வேண்டும். நல்ல உடல்நலத்துடன் தெளிவான கண் பார்வையுடன் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

ஆர்வமுள்ளவர்கள் https://www.arasubus.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று மார்ச் 21-ம் தேதி பிற்பகல் 1 மணி முதல் தொடங்கி ஏப்ரல் 21-ம் தேதி பிற்பகல் 1 மணி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,180 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.590 செலுத்த வேண்டும்.

தேர்விற்கான தேதிகள், அட்மிட் கார்டு ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்படும்.

error: Content is protected !!