தமிழ் குரல் / AI Voice
எவ்வளவு கோடி கொடுத்து வாங்கினாலும் பெட்ரோல் விலை மற்றும் மாசு விஷயங்கள் முகம் சுளிக்க தான் வைக்கிறது. இதை போக்கும் வண்ணம் லேசர் பவர் சிஸ்டம்ஸ் என்னும் அமெரிக்க நிறுவனம் இன்னும் இரண்டு வருடத்திற்க்குள் தோரியம் எனப்படும் 8 கிராம் அணு மூலம் 100 வருடத்திற்க்கு மேல் ஓடக்கூடிய காரை தயாரித்து டெஸ்ட் டிரைவ் செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்த தோரியத்தில் உலகில் பல நாடுகள் முண்ணயில் இருந்தாலும் இந்தியா இதில் மாஸ்டர் என அறிந்து கொள்வோமாக. அணு மின்சாரத்திர்க்கு தேவையான ப்ளோட்டோனியம் / யூரானியத்தை இந்தியாவுக்கு தரக்கூடாது என அமெரிக்கா தடை விதித்த வகையில் 2009 வரை தோரியம் மூலம் தான் மின்சாரத்தை பெற்றோம். 2009க்கு மேல் தான் யூரானியம் வைத்து மின்சாரம் பெற்றாலும் தோரியத்தை வைத்து நாம் இன்னும் மின்சாரம் மற்றும் ஏவுகனைகளை செய்கிறோம். இரண்டு நாளுக்கு முன் டெஸ்ட் செய்த ப்ருத்வி 2 கூட இந்த தோரியத்தால் செய்யபட்ட நியூக்ளியர் வார்ஹெட் தான் உபயோகபடுத்த போகிறார்கள்.
இந்த மாதிரி கார்கள் இந்தியாவில் செய்தால் அதிகமாய் பெட்ரோல் மற்றும் அண்ணிய செலவானி மிச்சமாகும். தோரியம் இந்தியாவில் பல மானிலங்களில் கிடைக்கிறது. இதன் மூலம் அதிக ஆபத்து / கதிர் வீச்சும் இருக்காது அது போக பல வருடங்களாக பல நீர் மூழ்கி கப்பல்கள் இந்த மாதிரி தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதையும் அறிவோமாக.இந்த எட்டு கிராம் மூலம் 165,000 லட்சம் லிட்டர் பெட்ரோலுக்கு சமம்.
100 Years you can run your car without fuel –
