பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தென்மேற்கு ரயில்வேயில் பணி வாய்ப்பு!
கர்நாடகா மாநிலம் ஹூப்ளியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்மேற்கு ரயில்வேயில் வொர்க் ஷாப், ரயில் சக்கர ஆலை உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 1299.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்: டிராக் மேன் – 621, ஹெல்பர் – டிஎம்ஓ – 104, ஹெல்பர் பிரிட்ஜ் – 01, ஹெல்பர் பி வே – 13, ஹெல்பர் வொர்க்ஸ் – 62, ஹெல்பர் சிவில் இன்ஜினி யரிங் – 16, ஹெல்பர் மெக்கானிக் – 129, ஹெல்பர் டீசல் மெக்கானிக் – 03, ஹெல்பர் எலக்ட்ரிக்கல் – 06, ஹெல்பர் எலக்ட்ரிக்கல் (ஆர்டபிள்யூஎப்) – 59, ஹெல்பர் (சிக்னல் மற்றும் டெலிகாம்) – 57, ஹெல்பர் (ஸ்டோர்ஸ்) – 06, , போர்ட்டர், ஹமால்,ஸ்வீப்பர் – 155, சபேவாலா – 62, ஹெல்பர் மெக்கானிக் – 05.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.01.2014 தேதிப்படி 18 முதல் 33-க்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Assistant Personnel Officer/Rectt/SWR/UBL என்ற பெயரில் HUBLமில் மாற்றத்தக்க வகையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.rrchubli.in. என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Assistant Personnel Officer/Recruitment,
Railway Recruitment Cell,
Divisional Office Compound, HUBLI- 580020.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.10.2013.
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.rrchubli.in./ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.


