பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 13 குழந்தைகள் பலி! – உ.பி.சோகம்

பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 13 குழந்தைகள் பலி! – உ.பி.சோகம்

உ. பி. மாநிலத்திலுள்ள குஷிநகர் மாவட்டத்தில் தனியார் பள்ளி பேருந்து ஒன்று குழந்தைகளை இன்று காலை ஏற்றிக் கொண்டு சென்றது. இந்தப் பேருந்து ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்றபோது எதிரில் வந்த ரயில் மோதியது. இந்த விபத்தில் 13 பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 7 மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்தில் பலியானவ குழந்தைகளில் பெரும்பாலான குழந்தைகள் 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பது வேதனையளிக்கும் செய்தியாகும்.

இந்த சம்பவம் குறித்து ரயில்வே செய்தி தொடர்பாளர் வேத் பிரகாஷ், “டிவைன் பப்ளிக் பள்ளியின் மாணவர்கள் சென்ற பேருந்து ஒன்று குஷிநகர் அருகே பேவ்பூர்வா பகுதியில் உள்ள ஆள் இல்லா லெவல் கிராஸிங்கை கடந்தது. அப்போது அந்த வழியாக வந்த தாவே – கப்பட்டன்கஞ்ச் பயணிகள் ரயில் (ரயில் எண் 55075) வேனின் மீது மோதியது. இதில் 13 குழந்தைகள் பலியாகினர். விபத்து நடந்தபோது வேனில் பள்ளிக்குழந்தைகள் உட்பட 25 பேர் இருந்துள்ளனர்”என்று அவர் கூறினார்.

இதனிடையே ரயில் விபத்தில் பலியான குழந்தைகள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருக்கிறார். கோரக்பூர் காவல் ஆணையர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டிருக்கிறார். இது குறித்து யோகியார் வெளியிட்ட ட்விட்டில், “குஷிநகரில் எதிர்பாராமல் நடந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் பலியானதில் துன்பம் சூழ்ந்துள்ளது. மறைந்த குழந்தைகளின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அனைவருக்கும் சிறந்த முறையான சிகிச்சை அளிக்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்

Related Posts