நெல்லை – சென்னை உட்பட 9 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்!
![நெல்லை – சென்னை உட்பட 9 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்!](https://www.aanthaireporter.in/wp-content/uploads/2023/09/vandhe-sep-24a.jpg)
நம் நாட்டில் ரயில் சேவையை மேம்படுத்தும் வகையிலும் 75 நகரங்களை இணைக்கும் படி வந்தே பாரத் விரைவு ரயில் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் வந்தே பாரத் இரயில் கடந்த 2019-ம் ஆண்டு டெல்லி – வாரணாசி இடையே தொடங்கப்பட்டது. இதனை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பல்வேறு நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் முதல் வந்தே பாரத் ரயில் சேவை சென்னை – மைசூரு இடையே கடந்த ஆண்டு நவம்பர் தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் தற்போது சென்னை – நெல்லை இடையே இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இதனோடு சேர்ந்து இன்று நாடு முழுவதும் மொத்தம் முக்கிய நகரங்களில் 9 வழித்தடங்களில் இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி காணொளி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை – நெல்லை வரை இயக்கப்படும் இந்த ரயில் வெறும் 8 மணி நேரத்தில் சென்று விடும். இதற்கான முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில், வரும் அக்.2-ம் தேதி வரை முன்பதிவு நிரம்பியுள்ளது.
9 வழித்தடங்கள் என்னென்ன ?
1. சென்னை – நெல்லை,
2. விஜயவாடா – சென்னை,
3. உதய்பூர்- ஜெய்ப்பூர்,
4. ஹைதராபாத் – பெங்களூரு,
5. பாட்னா – ஹவுரா,
6. ராஞ்சி – ஹவுரா,
7. காசர்கோடு – திருவனந்தபுரம்,
8. ரூர்கேலா – புவனேஸ்வர் – புரி,
9. ஜாம்நகர் – அகமதாபாத்