எச்டிஎஃப்சி வங்கியிலிருந்து அதானு சக்ரவர்த்தி திடீர் விலகல்-பின்னணி என்ன?

எச்டிஎஃப்சி வங்கியிலிருந்து அதானு சக்ரவர்த்தி திடீர் விலகல்-பின்னணி என்ன?

ந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி (HDFC) வங்கியின் பகுதிநேரத் தலைவரும், சுயாதீன இயக்குநருமான அதானு சக்ரவர்த்தி தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்துள்ளார். ஒரு மிகப்பெரிய நிதி நிறுவனத்தின் உயர்மட்டப் பதவியில் இருப்பவர், “தார்மீகக் காரணங்களை” முன்வைத்து விலகியிருப்பது இந்திய கார்ப்பரேட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விலகலுக்கான அதிரடி காரணம்

தனது ராஜினாமா கடிதத்தில் அதானு சக்ரவர்த்தி குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. “வங்கியின் உள்ளே நடக்கும் சில நிகழ்வுகள் மற்றும் நடைமுறைகள், எனது தனிப்பட்ட மதிப்புகள் மற்றும் அறநெறிகளுடன் (Values and Ethics) ஒத்துப்போகவில்லை” என்று அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். வங்கியின் செயல்பாடுகளில் நிலவும் சில உள்முறை முரண்பாடுகளே இந்தத் திடீர் முடிவுக்குக் காரணம் என்பதை அவரது அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.

தற்காலிகத் தலைவராக கேகி மிஸ்திரி நியமனம்

அதானு சக்ரவர்த்தியின் விலகலைத் தொடர்ந்து, காலியாக உள்ள அந்த இடத்திற்கு கேகி மிஸ்திரியை இடைக்கால பகுதிநேரத் தலைவராக நியமிக்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒப்புதல் அளித்துள்ளது.

  • கால அளவு: மார்ச் 19 முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு இவர் இந்தப் பதவியில் நீடிப்பார்.

  • பின்னணி: எச்டிஎஃப்சி லிமிடெட் மற்றும் எச்டிஎஃப்சி வங்கி இணைப்பிற்கு முன்பு, எச்டிஎஃப்சி லிமிடெட்டின் துணைத் தலைவராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் கேகி மிஸ்திரி.

முதலீட்டாளர்கள் கவனிக்கும் விஷயம்

நாட்டின் முன்னணி வங்கியில் அறநெறி சார்ந்த காரணங்களுக்காக ஒரு தலைவர் விலகுவது, வங்கியின் ‘கார்ப்பரேட் கவர்னன்ஸ்’ (Corporate Governance) குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. எச்டிஎஃப்சி வங்கி போன்ற ஒரு பிரம்மாண்டமான நிறுவனம், இந்தத் தலைமை மாற்றத்தையும், எழுந்துள்ள விமர்சனங்களையும் எப்படி கையாளப் போகிறது என்பதை முதலீட்டாளர்களும் சந்தை வல்லுநர்களும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

தச்சை குமார்

Related Posts