“சிறையில் தனது கணவர் விஷம் வைத்து கொலை செய்யப்படலாம் ” – இம்ரான்கான் மனைவி கடிதம்

“சிறையில் தனது கணவர் விஷம் வைத்து கொலை செய்யப்படலாம் ” – இம்ரான்கான் மனைவி கடிதம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் . இவர் தோஷகானா ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி, சிறையில் உள்ள த”னது கணவரின் பாதுகாப்பு குறித்து பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ சிறையில் தனது கணவர் விஷம் வைத்து கொலை செய்யப்படலாம் ” என கூறி உள்ளார். இது குறித்து புஷ்ரா பீபி பஞ்சாப் மாகாண உள்துறை செயலாளருக்கு அவர் கடிதம் ஒன்றைஎழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் எந்தவித நியாயமும் இல்லாமல் எனது கணவர் அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சட்டத்தின்படி, என் கணவரை அடியாலா சிறைக்கு மாற்ற வேண்டும். ஆக்ஸ்போர்டில் படித்தவர் மற்றும் நாட்டின் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் . அவரது சமூக மற்றும் அரசியல் அந்தஸ்தைக் கருத்தில் கொண்டு சிறையில் பி-கிளாஸ் வசதிகளை செய்து தர அனுமதி வழங்க வேண்டும்.

எனது கணவர் மீது கடந்த காலங்களில் ஏற்கனவே 2 முறை படுகொலை முயற்சிகள் நடந்தன. ஆனால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதனால் இம்ரான்கான் உயிருக்கு இன்னும் ஆபத்து உள்ளது. என் கணவர் அட்டாக் சிறையில் விஷம் வைத்து கொலை செய்யப்படலாம் என்ற அச்சம் இருந்து வருகிறது. அவர் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் என்ற முறையிலாவது எனது கணவர், வீட்டில் சமைத்த உணவை சிறையில் சாப்பிட அனுமதிக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

error: Content is protected !!