கதாநாயகியாக்கும் நான் – ஆயிரம் விளக்கு வேட்பாளர் குஷ்பு!

கதாநாயகியாக்கும் நான் – ஆயிரம் விளக்கு வேட்பாளர் குஷ்பு!

அண்ணா தி.மு.க. கூட்டணியில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளராக நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். அவர் இன்று நுங்கம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய குஷ்பு, “அண்ணா தி.மு.க. பாரதீய ஜனதா அமைத்துள்ளது வெற்றிக் கூட்டணி. தேர்தல் களத்தில் எனக்கு உற்சாகமளிக்கும் அனைத்து கட்சியினருக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றி. ஓர் தொகுதிக்காக வேட்புமனு தாக்கல் செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் ..நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு எப்போதும் எனக்கு உண்டு “என்று கூறினார்.

முன்னதாக ஆயிரம் விளக்கு தொகுதியில் நேற்று தனது பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் “ஆயிரம் விளக்கு தி.மு.க.வின் கோட்டை என்று கூறுவதே கேலியாக உள்ளது. அப்படி நினைத்திருந்தால் மு.க.ஸ்டாலின் எதற்கு கொளத்தூருக்கு ஓடினார்? எத்தனை பேர் போட்டியிட்டாலும் நல்லவர் யார்? என்பதை மக்களே முடிவு செய்வார்கள். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் பொறுப்பாளராக எனது கடமையை சரியாக செய்துள்ளேன்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையை கதாநாயகன், கதாநாயகி என்று மு.க.ஸ்டாலின் கூறிவருகிறார். உண்மையான கதாநாயகி நான் தான் என்று மக்கள் எப்போதோ கூறிவிட்டனர். அவர் நிறைய விஷயங்களை இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும். பல விஷயங்களில் அவர் பின்வாங்கி வருகிறார். பயம் என்ற வார்த்தைக்கு என் அகராதியிலேயே இடமில்லை. முதல் தடவை போட்டியிடுகிறேன் என்பதால் வெற்றிபெற கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறேன். வெற்றிக்கொடியை எட்டிப்பறிக்க போராடி வருகிறேன். என்னை வாழவைத்த மக்கள் என்னை ஜெயிக்கவும் வைப்பார்கள் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

error: Content is protected !!