தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவன மேலாளர் வேலை வாய்ப்பு!

தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவன மேலாளர் வேலை வாய்ப்பு!

மிழ்நாடு மின் ஆளுமை முகமையில் (TN e-governance Agency) மின் மாவட்ட மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. காஞ்சிபுரம், நாமக்கல், நாகப்பட்டினம், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, திருப்பூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.09.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

பணியின் பெயர்: e-District Manager/ மின் மாவட்ட மேலாளர்

கல்வித் தகுதி : B.E. /BTech in (Computer Science/Computer Science and Engineering/Information Technology/ Information Communication Technology) or Any U.G. Degree followed by M.C.A. / MSc.,(Computer Science)/ MSc.,(IT)/ MSc., (Software Engineering) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 01.06.2023 அன்று 21 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதற்கான கால அளவு 90 நிமிடங்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 24.09.2023

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.tnega.tn.gov.in என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 250.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.09.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய ஆந்தை வேலைவாய்ப்பு -என்ற இணையதள அறிவிப்பைப் பார்வையிடவும்.

error: Content is protected !!