32°C
விளம்பரம்
Advertisement

Tag: <span>Justice</span>

சர்வதேச நீதிக்கான உலக நாள்: உலகளாவிய அமைதிக்கும் மனித உரிமைப் பாதுகாப்புக்குமான அடித்தளம்! Exclusive

சர்வதேச நீதிக்கான உலக நாள்: உலகளாவிய அமைதிக்கும் மனித உரிமைப் பாதுகாப்புக்குமான அடித்தளம்!

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17-ஆம் தேதி சர்வதேச நீதிக்கான உலக நாளாகக் (World Day for International Justice) கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேச குற்றவியல் நீதி அமைப்பை வலுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாரபட்சமின்றி நீதி கிடைப்பதை உறுதி செய்யவும், உலகெங்கிலும் நடக்கும் மாபெரும் மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்தவும் இந்த நாள் ஒரு முக்கிய விழிப்புணர்வுப் புள்ளியாக அமைந்துள்ளது. வரலாற்றுப் பின்னணி: ரோம் பிரகடனம் (Rome Statute) சர்வதேச நீதிக்கான உலக நாள் உருவானதற்குப் பின்னால் ஒரு […]

July 17, 2026 admin
டெல்லி நீதிமன்றத் தீர்ப்பும்..ஆம் ஆத்மிக்குக் கிடைத்த புதுத்தெம்பும்! Exclusive

டெல்லி நீதிமன்றத் தீர்ப்பும்..ஆம் ஆத்மிக்குக் கிடைத்த புதுத்தெம்பும்!

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் நீண்ட கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரையும் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து டெல்லி ரவுஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 27, 2026) அதிரடி தீர்ப்பளித்துள்ளது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிய டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில், இன்று அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் […]

February 27, 2026 admin
“எல்லோரும் ஓர் நிறை…எல்லோரும் ஓர் விலை!”-இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்: Exclusive

“எல்லோரும் ஓர் நிறை…எல்லோரும் ஓர் விலை!”-இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்:

ஆண்டுதோறும் டிசம்பர் 10-ம் தேதி, “சர்வதேச மனித உரிமைகள் நாள்” (Human Rights Day) கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு உலக மனித உரிமைகள் பிரகடனத்தின் 76-வது ஆண்டாகும். சாதி, மதம், இனம், நிறம், பாலினம், வயது அல்லது சமூகப் பின்னணி என எதையும் பொருட்படுத்தாமல், நம் ஒவ்வொருவருக்கும் சொந்தமான உலகளாவிய உரிமைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய மிக முக்கியமான தருணம் இது. வரலாற்றுப் பின்னணி இரண்டாம் உலகப் போரின் கோரங்களுக்குப் பிறகு, மனித குலத்தின் மீதான நம்பிக்கையை […]

December 10, 2025 admin
‘கோடி வழக்குகளுக்குத் தீர்வு காண சமரசமே சிறந்த வழி!’-சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் Exclusive

‘கோடி வழக்குகளுக்குத் தீர்வு காண சமரசமே சிறந்த வழி!’-சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்

நாடெங்கும் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் கோடிக்கணக்கான வழக்குகளுக்குத் தீர்வுகாண்பதில், சமரசம் (Mediation) ஒரு முக்கியப் பங்காற்றுகிறது. இந்த மத்தியஸ்த முறையை அடிமட்ட அளவில் வெற்றிகரமாகச் செயல்படுத்துவது குறித்து விவாதிக்கும் விதமாக, ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் 2வது தேசிய மத்தியஸ்த மாநாடு 2025 நடைபெற்றது. இந்தியத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் (Justice BR Gavai)  இம்மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர், விரைவான நீதியை வழங்குவதிலும், நீதிமன்றங்களின் பணிச்சுமையைக் குறைப்பதிலும் சமரச முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். […]

September 28, 2025 admin
நிமிஷா பிரியா வழக்கும், இந்திய நீதித்துறையின் முரண்களும்! Exclusive

நிமிஷா பிரியா வழக்கும், இந்திய நீதித்துறையின் முரண்களும்!

ஏமனில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள கேரள செவிலியர் நிமிஷா பிரியா விவகாரம், உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாளை (ஜூலை 16) அவருக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என ஏமனின் ஹவுத்தி கோஷ்டிகள் அறிவித்துள்ள நிலையில், இந்திய அரசு தன்னால் இயன்ற அனைத்து இராஜதந்திர முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்த துயரச் சூழலில், நம் உள்நாட்டு நீதி அமைப்பின் செயல்பாட்டில் சில ஆழமான முரண்கள் வெளிப்படுவதும் கவலையளிக்கிறது. நிமிஷா பிரியா, ஹவுத்தி ஆட்சிக்கு முன்பே […]

July 15, 2025 admin
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் – நீதியின் உலகளாவிய குரல் எழும்பிய தினம்! Exclusive

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் – நீதியின் உலகளாவிய குரல் எழும்பிய தினம்!

ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி, உலகளாவிய நீதிக்கான ஒரு முக்கிய மைல்கல்லை நாம் நினைவுகூர்கிறோம். 2002 ஆம் ஆண்டு இதே நாளில்தான், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court – ICC) அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. மனித குலத்திற்கு எதிரான மிகக் கொடூரமான குற்றங்களான இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குற்றங்களை விசாரித்து, நீதியை நிலைநாட்ட உருவாக்கப்பட்ட ஒரு நிரந்தர நீதிமன்றம் இது. பின்னணி மற்றும் உருவாக்கம் இரண்டாம் […]

July 1, 2025 admin
சுப்ரீம் கோர்ட்டின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார்!. Exclusive

சுப்ரீம் கோர்ட்டின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார்!.

கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி சுப்ரீம்கோர்ட்டின் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற சஞ்சீவ் கன்னா ஓய்வு பெற்றார். இந்நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட்டின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் […]

May 14, 2025 admin
“நெருப்பில் எரிந்தது பதினோறு கோடியா? நீதியின் நம்பிக்கையா?” Exclusive

“நெருப்பில் எரிந்தது பதினோறு கோடியா? நீதியின் நம்பிக்கையா?”

டெல்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் தீப்பிடித்த சமயத்தில், எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் பணம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஒரு அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. நீதியை நிலைநாட்ட வேண்டிய ஒரு நீதிபதியின் இல்லத்தில், எந்த விளக்கமும் இல்லாமல் இவ்வளவு பெருந்தொகை எப்படி வந்தது? இது வெறும் பணத்தைப் பற்றிய கேள்வி மட்டுமல்ல—இது நமது நீதித்துறையின் நேர்மை, நம்பகத்தன்மை, மக்களின் நம்பிக்கை ஆகியவற்றைப் பற்றிய கேள்வி. உச்சநீதிமன்றம் மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து […]

March 23, 2025 admin
2 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலியல் வழக்குகளைத் தீர்ப்பதில் சிக்கல்!? Exclusive

2 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலியல் வழக்குகளைத் தீர்ப்பதில் சிக்கல்!?

இப்போதெல்லாம் எல்லா நாடுகளிலும் தற்சமயம் பாலியல் குற்றங்கள் அதிகமாகி வருகின்றன. ஆனால் பாலியல் குற்றங்களை கணக்கிடுவதில் சில சிக்கல்கள் உள்ளன. பாலியல் மற்றும் கற்பழிப்பு குற்றங்களின் கணக்கீடானது ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரம், மற்றும் மக்களின் மனநிலையை பொறுத்து மாறுப்படுகிறது.சில நாடுகளில் கற்பழிக்கப்பட்ட அல்லது பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் இழிவானவர்களாக பார்க்கப்படுவார்கள், குடும்பத்தால் நிராகரிக்கப்படுகிறார்கள் எனவே அந்த அச்சம் காரணமாகவே அதிகமான பாலியல் குற்றங்கள் பதிவு செய்யப்படுவதில்லை.சில நாடுகளில் திருமணமான பெண்களுக்கு அவர்களின் கணவர்களால் நடத்தப்படும் பாலியல் […]

September 11, 2024 admin
சர்வதேச நீதிக்கான உலக நாள்! Exclusive

சர்வதேச நீதிக்கான உலக நாள்!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) பணிகளை ஆதரிப்பதற்கும் அங்கீகரிப்பதற்கும்,நீதிமன்றங்களின்மீது நம்பிக்கை கொள்ளவுமே, சர்வதேச நீதிக்கான உலக தினம் (சர்வதேச குற்றவியல் நீதி நாள் அல்லது சர்வதேச நீதி தினம் என்றும் அழைக்கப்படுகிறது) ஜூலை 17 அன்று உலகளவில் கொண்டாடப்படுகிறது. ஆங்கிலத்தில் சொல்வதானால் International Justice Day. ஜூலை 17, 1998-ல் ரோம் நகரில் நடந்த உலக நாடுகளின் மாநாட்டில் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தை (International criminal court) உருவாக்குவதற்கான ரோம் ஒப்பந்தம் உருவானது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் […]

July 17, 2024 admin
உடனடி செய்திகள்