32°C

Tag: <span>டெல்லி</span>

இணைய அடிமைகளாகும் சிறுவர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிறப்பு சிகிச்சை பிரிவு! Exclusive

இணைய அடிமைகளாகும் சிறுவர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிறப்பு சிகிச்சை பிரிவு!

1990-க்குப் பின் நமது வாழ்க்கை முறை இயந்திரத்தனமாகி விட்டது. பெரும்பாலும் கைபேசியுடனோ மடிக் கணினியுடனோதான் அனைவருடைய நேரமும் இன்று கழிகிறது. விளையாடுவதாக இருந்தாலும் இணையதளத்தில்தான் பெரும்பாலானவர்கள் விளையாடுகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது உடல்நலம் மட்டுமல்ல; மனநலமும்தான்.அதிக அளவு இணையதளத்தைப் பயன்படுத்துவதும், இணையம் இல்லாமல் இருக்க முடியாது என்பதும், மது, புகைபோல் ஓர் அடிமைப் பழக்கம்தான். ஒரு வாரத்துக்கு 38.5 மணிநேரத்துக்கும் அதிகமாக இணையதளத்தைப் பயன்படுத்துகிறவர், மனத்தளவில் அதற்கு அடிமையாக இருப்பார் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது, இணையதள […]

February 28, 2025 admin
டெல்லி முதல்வராக ரேகா குப்தா தேர்வு! Exclusive

டெல்லி முதல்வராக ரேகா குப்தா தேர்வு!

பாஜக கைப்பற்றிய டெல்லியின் முதல்வராக நேற்று தேர்வு செய்யப்பட்ட ரேகா குப்தா (50), இன்று பதவியேற்க உள்ளார். இதையொட்டி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா பதவி பிரமாணத்தையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் செய்து வைக்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியுடன், மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். பாஜக ஆளும் 21 மாநிலங்களின் முதல்வர்களும், துணை முதல்வர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். விழாவில் பங்கேற்க ஆட்டோ டிரைவர்கள், பெண்கள், […]

February 20, 2025 admin
டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக! Exclusive

டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக!

தலைநகர் டெல்லியில் மொத்தமுள்ள தொகுதிகள் 70. ஆட்சியமைக்க 36 இடங்கள் தேவை எனும் நிலையில், 48 இடங்களைக் கைப்பற்றி பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. அதேவேளையில், வெறும் 22 தொகுதிகளை மட்டும் வசமாக்கிய ஆம் ஆத்மி ஆட்சியை இழக்கிறது. காங்கிரஸ் ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை.டெல்லியில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமுள்ள 7 தொகுதிகளில் ஆம் ஆத்மி 6 தொகுதிகளிலும், பாஜக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது அரசியல் பார்வையாளர்களை கவனிக்க வைத்துள்ளது.27 ஆண்டுகால காத்திருப்புக்குப்பின் தலைநகர் […]

February 9, 2025 admin
டெல்லி: தேசியக் கொடியை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றினார்! Exclusive

டெல்லி: தேசியக் கொடியை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றினார்!

நாடு முழுவதும் 76வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.டெல்லியில் காலை 10.30 மணி அளவில் குடியரசு தினவிழா தொடங்கியது. இதற்காக கடமைப் பாதைக்கு வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, சிறப்பு விருந்தினரான இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ ஆகியோரை, பிரதமர்மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர். துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் […]

January 26, 2025 admin
டெல்லியில் ஒரே கட்டமாக பிப்ரவரி 5ல்  தேர்தல் – ஈரோட்டுக்கும் அதே நாளில் இடைத்தேர்தல்! Exclusive

டெல்லியில் ஒரே கட்டமாக பிப்ரவரி 5ல் தேர்தல் – ஈரோட்டுக்கும் அதே நாளில் இடைத்தேர்தல்!

டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து 70 தொகுதிகளுக்கும் தேர்தல் எப்போது நடைபெறும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்திலும் ஈடுபட தொடங்கி விட்டது. பா.ஜ.க, மற்றும் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை பிடிக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந் நிலையில், சட்டப்பேரவை பொதுத் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் […]

January 7, 2025 admin
டெல்லியில் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் காற்றின் தரம்! Exclusive

டெல்லியில் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் காற்றின் தரம்!

நம் இந்தியாவிலேயே தலைநகர் டெல்லியில் அக்டோபர் மாதத்தில் காற்று மாசுபாடு மிக மோசமாக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் தொடர்ந்து காற்றின் தரம் மோசம் அடைந்து வருவதால் மக்கள் ஆஸ்துமா, சுவாசப்பிரச்சனை, தலைவலி, நெஞ்சு எரிச்சல் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் டெல்லியில் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. நோயாளிகளில் பெரும்பாலானவர்களுக்கு நுறையீரல் தொடர்பான நோய், ஆஸ்துமா ஆகியறவற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வேளாண் கழிவுகளை எரிப்பது, தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் […]

November 6, 2024 admin
காற்று மாசு பிரச்னையால் திணறி வரும் தலைநகர் டெல்லி! Exclusive

காற்று மாசு பிரச்னையால் திணறி வரும் தலைநகர் டெல்லி!

டெல்லியில் காற்றின் தரம் கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குளிர் காலங்களில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு காரணமாக குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்டோர் மூச்சுத்திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகின்றனர்.டெல்லியில் பாயும் யமுனை நதியில் பனிப்படலம் போன்று ரசாயனங்கள் நுரைகளாக உருவாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது. காலிந்தி கஞ்ச் பகுதியில் உள்ள யமுனை ஆற்றில் காணப்பட்ட இந்த காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நீரில் உருவாகியுள்ள நுரையில் அமோனியா மற்றும் பாஸ்பேட் அளவு அதிகம் […]

October 19, 2024 admin
டெல்லி புதிய முதல்வர் அதிஷி.!கெஜ்ரிவால் அறிவிப்பு! Exclusive

டெல்லி புதிய முதல்வர் அதிஷி.!கெஜ்ரிவால் அறிவிப்பு!

டெல்லியின் புதிய முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி அதிஷியை முதல்வராக்க முடிவெடுத்துள்ளது.இன்று மதியம் டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனாவை சந்தித்தப் பிறகு, அரவிந்த் கேஜ்ரிவால் தனது முதல்வ்வர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். இதனையடுத்து டெல்லி அமைச்சர் அதிஷி முதல்வராக பதவியேற்கிறார். இன்று நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கட்சியில் […]

September 17, 2024 admin
டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் பலி..! ராகுல் கண்டனம்..! Exclusive

டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் பலி..! ராகுல் கண்டனம்..!

நம் நாட்டின் தலைநகர் டெல்லியில் சனிக்கிழமை கனமழை பொழிந்தது. இந்நிலையில், அங்குள்ள பிரபல தனியார் யுபிஎஸ்சி பயிற்சி மையத்தின் தரைக்கு கீழ்த்தளத்தில் (பேஸ்மெண்ட்) வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கி மாணவிகள் இருவர் மற்றும் ஒரு  உயிரிழந்தனர். ஒருவர் மாயமானார்.   உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். “டெல்லியில் உள்ள கட்டிடத்தின் அடித்தளத்தில் தண்ணீர் தேங்கியதால் போட்டி மாணவர்கள் உயிரிழந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என அவர் தெரிவித்துள்ளார். டெல்லியில் மேற்குப் பகுதியில் உள்ள ஓல்ட் இந்திரா […]

July 28, 2024 admin
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு! Exclusive

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!

டெல்லி முதலைமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், தற்காலிகமாக வழங்கப்பட்ட ஜாமீனை நிறுத்தி வைத்து டெல்லி ஐகோர்ட் உ த்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டின் கடந்த மார்ச்-21 ம் தேதி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், டெல்லி சிறப்பு நீதிமன்றம் நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது . இன்றைய நாளில் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் […]

June 21, 2024 admin