பைசா வேற வாழ்க்கை வேற – நடிகை ஆரா தத்துவம்!

பைசா வேற வாழ்க்கை வேற – நடிகை ஆரா தத்துவம்!

சினிமாவில் பைசாவை மையமாக வைத்து கொண்டு உருவான பாடல்கள் ஏராளம். பிரபு தேவாவின் ‘சென்னை பட்டினம் எல்லாம் கட்டணம், சிலம்பரசனின் நோ மணி நோ ஹனி, காசு பணம் துட்டு மணி என ஏகப்பட்ட பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கிறது. அந்த அளவிற்கு மனிதர்களை தன் பிடியில் வைத்திருக்கிறது பணம். அந்த பணத்தை கதை கருவாக கொண்டு உருவாகியுள்ள படம் தான் பைசா. விஜயின் ‘தமிழன்’ திரைப்படத்தை இயக்கிய அப்துல் மஜீத் இத்திரைப் படத்தை இயக்க, பசங்க புகழ் ஸ்ரீராம், புதுமுகம் ஆரா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். கான்பிடண்ட் பிலிம் கபே, KJR ஸ்டுடியோஸ் மற்றும் RK ட்ரீம் வேர்ல்ட் இந்த படத்தை தயாரிக்க, கராத்தே கே ஆனந்த் இணை தயாரிப்பு செய்துள்ளார். நடிகர்கள் நாசர், மதுசூதனன், மயில்சாமி, ராஜசிம்மன், சென்ட்ராயன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. K.P. வேல்முருகனின் ஒளிப்பதிவும், J.V. இசையும் படத்திற்கு வலுவூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியீட்டிற்கு தயாராகி கொண்டிருக்கும் இந்த படத்தின் நடிகை ஆரா, இப்போதே இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளார் என்பதை சொல்லியே ஆக வேண்டுமாம். “பைசா என்பது வாழ்க்கையின் அத்தியாவசிய தேவை தான்; ஆனால் அதுவே வாழ்க்கையாக மாறி விட கூடாது. இது தான் எங்கள் படத்தின் ஒரு வரி கதை. இயக்குனர், கதாநாயகன், சக நடிகர்கள் என ஒட்டு மொத்த படக்குழுவினரும் திறமைக்கு சான்றாக விளங்கியது மட்டுமில்லாமல் என் திறமைகளை மென்மேலும் வளர்த்துக்கொள்ள உதவினர் . எதார்த்த வாழ்க்கையை மிக அழகாக திரையில் படைக்கும் வல்லமை படைத்தவர் இயக்குனர் அப்துல். ஆரம்பத்தில் நான் சிறிது தயங்கி இருந்தாலும், அவருடைய நம்பிக்கையான பேச்சும், சாதிக்கும் எண்ணமும் என்னை பயத்தில் இருந்து முற்றிலும் வெளியே கொண்டு வந்துவிட்டது. ஓவ்வொரு காட்சியையும் நன்கு உணர்ந்து கொள்ள தேவையான கால அவகாசத்தை தன்னுடைய நடிகர்களுக்கு வழங்குவதே அவரின் சிறப்பம்சம். எனக்கு மட்டுமின்றி எங்கள் படக்குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் நல்லாசிரியராக திகழ்பவர் அப்துல். இது போல ஒரு திறமையான கூட்டணியில் நான் பணி புரிந்தது, எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது.” என்கிறார் அழகும் அறிவும் ஒருங்கே இணைந்த ஆரா.

சினிமாவில் பத்திரிக்கை தொடர்பாளராக சிறந்து விளங்கும் துரை பாண்டியின் மகளான ஆரா கூறுகையில், “எனக்கு நடிப்பின் மேல் ஆர்வம் வர காரணமாக இருந்தவர் எனது தந்தை தான். என்னுடைய இக்கட்டான நேரங்களில் எனக்கு உறுதுணையாக இருந்து ஆர்வம் ஊட்டிய அவருக்கு எனது நன்றிகளை சமர்பித்து கொள்கிறேன். மக்களின் ரசனைகளையும், எதிர்பார்ப்பு களையும் பூர்த்தி செய்வதே ஒரு நடிகரின் முக்கியமான கடமை. அந்த வகையில் எனது பங்கு பெருமளவு இருக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்கிறார் ஆரா.

சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும், ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டு சென்ற ‘சாட்டை’, ‘கோலி சோடா’ மற்றும் ‘காக்கா முட்டை’ படங்களின் வரிசையில் இந்த ‘பைசா’ திரைப்படமும் இடம் பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!