June 2, 2023

நீட் தேர்வு : விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 20ந்தேதி வரை நீட்டிப்பு!

ந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நீட் தோ்வு மூலம் நடைபெற்று வருகிறது. 2022-23-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு வரும் ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. நீட் தோ்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

மே மாதம் 6-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மே 15–ம் தேதி வரை விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றுடன் விண்ணப்பிக்கும் தேதி முடிவடைய இருந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மேலும் மே 20–ந் தேதி இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை நீட் தேர்வுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.