தேசிய பாதுகாப்பு அகாடமியில் வேலை!
தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் நாவல் அகாடமியில் 413 காலியிடங்களை நிரப்புவதற்கு, யு.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே இத்தேர்வு 19.04.2020ல் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக 2020 செப்., 6ம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
காலியிடம்: தேசிய பாதுகாப்பு அகாடமியில் (ராணுவம் 208, கப்பல்படை 42, விமானப்படை 120) 370, நாவல் அகாடமியில் 43 என மொத்தம் 413 இடங்கள் உள்ளன.
வயது: திருமணம் ஆகாத ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். 2002 ஜன., 2 – 2005 ஜன., 1க்குள் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ராணுவத்துக்கு பிளஸ் 2, மற்ற பிரிவுகளுக்கு பிளஸ் 2 படிப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவு முடித்திருக்க வேண்டும்.
தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 6.7.2020.
விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு