ஊடகங்கள் பாராட்டும் ‘D3’ படம்!

ஊடகங்கள் பாராட்டும் ‘D3’ படம்!

ளைய இயக்குநர் பாலாஜியின் இயக்கத்தில் நடிகர் பிரஜின் கதாநாயகனாக நடித்துள்ள ‘டி3’ படத்தின் திரையீடு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்களும் பத்திரிகை ஊடக நண்பர்களும் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்வில் படத்தின் நாயகன் பிரஜின் பேசும் போது ” நான் ரொம்ப நாளாக நல்ல பிரேக்கிற்காகக் காத்திருந்தேன். இது மாதிரி ஒரு நல்ல படம் செய்ய வேண்டும் என்று எனக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ‘பழைய வண்ணாரப்பேட்டை’ படம் வந்தது. ஜெயலலிதா அவர்கள் இறந்த காலகட்டத்தில் அந்தப் படம் வெளியானதால் நான் எதிர்பார்த்த மாதிரி அதற்கு வெற்றி கிடைக்கவில்லை. எனக்குள் நெடுநாளாகவே ஒரு ஆசை இருந்தது. சரியான போலீஸ் பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கனவு இருந்தது.ஏனென்றால் எனது தந்தை ,தாய் இரண்டுபேருமே காவல்துறையில் பணியாற்றினார்கள். நான் நடித்தால் எனது உடல் தோற்றம் சரியாக இருக்குமா? ஃபிட்டாக ஆகுமா ?யூனிஃபார்ம் போட்டால் பொருத்தமாக இருக்க வேண்டுமே யாரும் பார்த்துச் சிரித்து விடக்கூடாதே என்ற அச்சமும் தயக்கமும் இருந்தது. அந்த நேரத்தில் தான் பாலாஜி வந்தார் , கதை சொன்னார். முதலில் வில்லனாக நடிப்பதற்காகத்தான் என்னிடம் கேட்டார். என் நல்ல நேரம் நான் இதில் கதாநாயகனாக மாறி நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

குற்றாலம், தேனி என்று ஒரு நாளில் நடக்கும் கதை.போலீஸ் கதை என்றாலே மாஸ்ஸாக காட்டி பெரிய ஹீரோக்கள் நடிப்பார்கள். புதிதாக வருபவர்கள் அப்படி நடிப்பதில்லை. அது ஒரு ரிஸ்க்கான விஷயம். ஆனால் இயக்குநர் பாலாஜி தன் மனதில் என்ன நினைத்தாரோ அதையே படமாக எடுத்துள்ளார். அருமையாக திரைக்கதை அமைத்துள்ளார். ஒரே இரவில் நடக்கும் கதை இது. தமிழ் சினிமாவில் யாரும் இது மாதிரி முயற்சி செய்யவில்லை .பெரிய மாஸ் ஹீரோ படங்களுக்கு விளம்பரம் தேவையில்லை. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது .புது படக் குழுவினரின் நல்ல புதிய படைப்புகளுக்கு ஊடகங்கள் என்றும் ஆதரவு தரும்.ஊடகங்களான உங்களை மீறி எதுவும் இல்லை. இருபது ஆண்டு காலத்தில் நான் உணர்ந்த பாடம் இது .நல்ல படத்தை ஊடகங்கள் என்றும் கைவிட்டதில்லை. இந்தப் படம் எனக்குப் பிடித்த படம்.நீங்கள் எழுதும் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் மக்களிடம் படத்தைக் கொண்டுபோய்ச் சேர்க்கும்.இயக்குநருக்கும் இதைத் தயாரித்த பீமாஸ் நிறுவனத்திற்கும் நன்றிகள்” என்றார்.

படத்தில் இயக்குநர் பாலாஜி பேசும்போது , “இது ஒரு உணர்ச்சிகரமான நிகழ்வு .முதலில் வேறொரு கதாநாயகனை வைத்து ஒரு திரைப்படம் ஆரம்பித்தேன் அதைத் தொடர முடியவில்லை. பிறகு D3 என்ற இந்தப் படத்தை ஆரம்பித்தேன். இது ஒரு சீக்வல் கதை. D3க்கு பிறகு D2, D1 படங்கள் தயாராகும்.

இந்தப் படத்திற்கு பிரஜினை நடிக்க வைத்த போது உடன் அறிமுகமான நண்பர், பிரஜின் வேண்டாம் என்றார். இந்தக் கதையைச் சொல்லும் போது பலரும் கதையை நம்ப மாட்டார்கள் .தயாரிப்பை நம்ப மாட்டார்கள்.நமக்கான நடிகர் வருவார் என்று நான் காத்திருந்து தேடினேன். அப்படி வந்தவர் தான் பிரஜின். இதில் ஒரு காட்சி வரும். அதில் நடிப்பதற்கு யாருமே ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் பிரஜின் ஒப்புக்கொண்டார்.

இது கோவிட் காலத்தில் சிக்கிக் கொண்டது .அந்த இடைவெளியில் பிரஜின் தனது உடலை ஃபிட்டாக மாற்றினார். பிறகு வேறு ஒரு தோற்றத்திற்காகவும் உடலை மாற்றிக்கொண்டார். இந்தப் படத்தில் பல்வேறு போராட்டங்கள் இருந்தன. இன்று படம் எடுப்பதை விட பிறகு உள்ள பிரச்சினைகள் அதிகம். தமிழ் சினிமாவில் யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்று புரிவதற்குள் நீண்ட காலமாகிவிடும்.நமக்கு அறிமுகமாகி வருபவர்கள், நண்பர்களிடம் அசல் யார் போலியார் என்று அறிந்து கொள்வதே பெரிய சவால்.

முன்பு என்னை வைத்து படம் தொடங்கிய தயாரிப்பாளர் முருகேசன், இங்கே வந்துள்ளார். நிச்சயமாக அந்தப் படமும் வெளியாகும். எனக்கு எப்போதும் சில நண்பர்கள் உடன் இருக்கிறார்கள் . பீமாஸ் கிரிக்கெட் டீம் என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணம் செய்தார்கள். ரஜீஷ். அருள்ஜோதி, நா. சரவணன் போன்றவர்கள் எப்போதும் எனக்கு நேர் நிலையான நம்பிக்கை அளித்தார்கள். முதலில் மூன்றரை மணி நேரமாக இருந்த இந்தப் படத்தை ராஜா முகமது ஒரே வாரத்தில் முதல் பாதியை எடிட் செய்து காட்டிய போது வேறு மாதிரியாக மாறியது. பெரிய நம்பிக்கை ஏற்பட்டது. அதேபோல் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் கடும் உழைப்பாளி. லோ பட்ஜெட்டில் உள்ள விஷயத்தை தனது திறமையின் மூலம் ஹை பட்ஜெட் ஆக மாற்றிக் காட்டுவார்.இந்தப் படம் நிச்சயமாக சுவாரசியமாக இருக்கும்.
வேகம் குறையாமல் விறுவிறுப்பாக இருக்கும்”என்றார்.

நடிகர் ‘ராட்சசன்’ புகழ் சரவணன் பேசும்போது “நான் இந்தப் படத்தில் ஒரு நாள் தான் நடித்திருப்பேன். ஆனாலும் திருப்தியான அளவில் எனது நடிப்பு இருந்தது. அவசரம் அவசரமாக என்னை அழைத்தார்கள். டீ எஸ்டேட்டில் இருட்டுக்குள் இரவு நேரத்தில் நான் நடித்த காட்சியை எடுத்தார்கள். இவ்வளவு அவசரப்படுகிறார்களே, இது சரியாக வருமா என்று எனக்கு அப்போது ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால் டப்பிங் பேசும் போது அதைப் பிரேமில் பார்த்தபோது நான் வருவது ஒரு காட்சியாக இருந்தாலும் மிகவும் சிறப்பாக இருந்தது.அது நான் எதிர்பாராத வகையில் இருந்தது .அந்த வகையில் இந்தப் படம் என் மனதிற்கு நெருக்கம் ஆகிவிட்டது .இந்தப் படம் வெற்றி பெற நான் வாழ்த்துகிறேன்” என்றார்.

படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் மோகன் ஜி கூறும்போது, “என்னுடைய முதல் படத்தின் கதாநாயகன் பிரஜின் திரை உலகில் தனக்கான ஒரு அடையாளத்தையும் நல்ல வெற்றியையும் தேடிக்கொள்ள வேண்டும் என்று சுமார் 14 ஆண்டு காலம் போராடும் ஒரு போராளி .நல்லதொரு ஆத்மா. D3 படம் பார்த்தேன்.நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது .யாரும் சொல்லாத விஷயத்தை இந்தப் படத்தில் சொல்லியுள்ளார்கள்.இந்த படத்தைப் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .இப்படிக் கூட மருத்துவத்துறையில் நடக்குமா என்று நான் ஆச்சரியப்பட்டேன். ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுகிறேன் தயவு செய்து இந்தப் படத்தை ஒருமுறை திரையரங்கு சென்று பாருங்கள். வேறு எந்தப் படத்திற்குச் சென்றாலும் இதையும் அந்தப் படத்துடன் சேர்த்துப் பாருங்கள். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் .படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

இயக்குநர் நடிகர் சசிகுமார் கூறும் போது, ” தம்பி பிரஜின் நடித்த D3 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அனைவரும் திரையரங்கு சென்று இந்தப் படத்தைப் பாருங்கள் .இந்தப் படத்தில் நடித்த தம்பி பிரஜினுக்கும் படத்தை இயக்கிய இயக்குநருக்கும் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். மறவாமல் திரையரங்கு சென்று இந்தப் படத்தைப் பாருங்கள்” என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இவ்வாறு இந்தப் படத்தைப் பார்த்த திரை பிரபலங்களுக்குப் படம் பிடித்துப் போய் வாழ்த்தி,கருத்தைக் கூறி வருகிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்த ஊடகத்துறையினர் இயக்குநருக்கும் நடிகர் பிரஜினுக்கும் ஒரு புதியவாழ்க்கை தரும் விதத்தில் இந்தப் படம் அமைந்திருப்பதாகப் பாராட்டு தெரிவித்தார்கள்.

error: Content is protected !!