பெண்கள் உரிமை ஆர்வலர் லூஜெய்ன் அல்-ஹத்லூலுக்கு  5 ஆண்டு ஜெயில்!

பெண்கள் உரிமை ஆர்வலர் லூஜெய்ன் அல்-ஹத்லூலுக்கு  5 ஆண்டு ஜெயில்!

செளதி அரேபியாவை சேர்ந்த பெண்கள் உரிமை ஆர்வலர் லூஜெய்ன் அல்-ஹத்லூலுக்கு  5 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

செளதி அரேபியா வம்சாவளியைச் சேர்ந்த பெண் உரிமை ஆர்வலர் லூஜெய்ன் அல்-ஹத்லூல் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தால் தடைசெய்யப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கடந்த 2018 மே மாதம் கைது செய்யப்பட்டார். அந்நாட்டில் பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்க வேண்டும். பெண்கள் வேலைக்கு செல்ல, வெளிநாடு செல்ல என பல்வேறு விஷயங்களுக்கு ஆண்களின் அனுமதியை எதிர்பார்க்க வேண்டிய கட்டாயம் ஆகியவற்றிக்கு எதிராக போராடி கொண்டிருந்த போது லூஜெய்ன் மற்றும் சில பெண்கள் உள்ளூர் அதிகாரிகளால் கைது செய்யப் பட்டனர். இந்நிலையில் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் வரலாற்று தீர்ப்பை செளதி நீதிமன்றம் வழங்குவதற்கு ஒரு வாரம் முன்பு அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லூஜெய்ன் கைது செய்யப்பட்டதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு எழுந்தது. மேலும் அவரை விடுதலை செய்யும்படி தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் செளதி அரசு எதையும் கண்டுக்கொள்ளவில்லை. தலைநகர் ரியாத்தின் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்றது. வழக்கு பின்னர் பயங்கரவாத எதிர்ப்பு நீதி மன்றத்திற்கு (சிறப்பு குற்றவியல் நீதிமன்றம்) மாற்றப்பட்டது

விசாரணை முடிவில் லூஜெய்ன் அல்-ஹத்லூலிக்கு பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தால் நேற்று தண்டனை அறிவிக்கப்பட்டது. அவருக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.இந்த தண்டனையை எதிர்த்து அடுத்த 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் .மேலும் அவரது தண்டனையை இரண்டு ஆண்டுகள் மற்றும் பத்து மாதங்கள் குறைக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

error: Content is protected !!