தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் தீ!

தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் தீ!

சென்னை எல் ஐ சி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து வீடியோக்களை செய்தியை பார்த்துக் கொண்டிருந்த நம்மிடம் நம் கட்டிங் கண்ணையா ஒரு கட்டிங் பேப்பரை நீட்டினார்.

அதில் —

சென்னையின் அடையாளமாக இன்றும் எழிலுற விளங்கிக் கொண்டிருக்கும், அண்ணா சாலை எல்।ஐ.சி கட்டடத்திற்கு 64 வயதாகிறது.

அந்தக் காலத்து கருப்பு வெள்ளைப் படங்களில் பட்டணத்தைக் (சிங்கார சென்னைதான்) காட்டும் காட்சிகளில் முதலில் வருவது எல்.ஐ.சியின் 14 மாடி கட்டடம்தான். அந்த அளவுக்கு சென்னையின் அடையாளமாக பல காலமாக திகழ்ந்து வருகிறது எல்ஐசி கட்டடம்.

இந்த நீண்டு நெடிதுயர்ந்த கட்டடத்திற்கு வயது 64 ஆகிறது என்றால் இப்போதும் கூட சத்தியமாக நம்ப முடியவில்லை. அந்த அளவுக்கு புது மணப் பெண் போல, புதுக் கருக்கு மாறாமல் அப்படியே ஸ்லிம்மாக நின்று கொண்டிருக்கிறது இவ்வளவிற்கும் கடந்த 1975 ல் ஒரு பெரு தீ விபத்தை சந்தித்த எல்.ஐசி. கட்டடம் இன்றும் சென்னைக்கு வருபவர்கள் வந்து வேடிக்கை பார்க்கும் இடமாக திகழ்கிறது.

சென்னை நகரவாசிகளுக்குப் பெருமையாகவும், இதர ஊர்க்காரர்களுக்கு ஆச்சரியமாகவும் திகழும் எல்.ஐ.சி கட்டடத்தின் கதை சுவாரஸ்யமானது,
ஆச்சரியமூட்டக் கூடியது.

சென்னையின் முதல் உயரமான கட்டடம் என்ற பெருமை எல்.ஐ. சி கட்டடத்திற்கு இன்றும் உண்டு.

அதுமட்டுமல்ல இந்தியாவின் முதலாவது உயரமான கட்டடமும் இதுதான்.

1959ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி எல்.ஐ.சி கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.தனது எம்.சி.டி குரூப் நிறுவனத்திற்கு பிரமாண்ட அலுவலக கட்டடம் தேவை என்று கருதினார் பிரபல தொழிலதிபர் எம்.சிதம்பரம் செட்டியார். இந்த குருப்பீல் இடம் பெற்றிருந்த நிறுவனங்கள் – யுனைட்டெட் இந்தியா லைப், யுனைட்டெட் இந்தியா பயர் அன்ட் ஜெனரல் மற்றும் நியூ கார்டியன் லைப் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இடம் பெற்றிருந்தன. சிதம்பரம் செட்டியாருக்கு நியூயார்க்கில் உள்ள ஐ.நா. கட்டடம் பெரும் உந்துதலாக இருந்தது. அதே போல சென்னையில் பிரமாண்ட, உயரமான கட்டடத்தைக் கட்ட அவர் திட்டமிட்டார்.

அதுதான் தற்போது அண்ணா சாலையில் கம்பீரமாக நிற்கும் எல்.ஐ.சி கட்டடம்.இந்தக் கட்டடத்தை வடிவமைக்கும் பொறுப்பை லண்டனைச் சேர்ந்த பிரபல கட்டடக் கலை வல்லுனர்களான பிரவுன் அன்ட் மவுலினிடம் விட்டார். 1953ம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கின. 1957ம் ஆண்டு திடீரென பிரவுனும், மவுலினும் விலகிக் கொண்டனர்.

இதையடுத்து சென்னையைச் ேசர்ந்த சித்தாலே நிறுவனத்தினர் மிச்சப் பணிகளை மேற்கொண்டு கட்டி முடித்தனர்.

இந்த நிலையில், 1956ம் ஆண்டு நேரு அரசாங்கம் நாட்டில் இருந்த தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களையெல்லாம் நாட்டுடமையாக்கியது. அவற்றின் சொத்துக்களையும் தன் வசம் எடுத்துக் கொண்டது.இதனால் 1959ம் ஆண்டு கட்டடம் கட்டி முடிக்கப்பட்டபோது அது அரசு கட்டிடமாக மாறியிருந்தது. சிதம்பரம் செட்டியாரின் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அனைத்தும் அரசின் லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் இந்தியாவின் (எல்.ஐ.சி) ஒரு அங்கமாக மாறிப் போயிருந்தது.

1.40 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஆயிரம் டன் எஃகு, 3,000 டன் சிமெண்ட் கொண்டு இந்தக் கட்டடம் கட்டப்பட்டது.

இதன் உயரம் 177 அடியாகும்.கட்டடத்தின் மொத்தப் பரப்பளவு 13 லட்சத்து 6 ஆயிரத்து 100 சதுர அடியாகும்.

அதாவது 56.5 கிரவுண்டு ஆகும். தரைப் பகுதி மட்டும் 14.5 கிரவுண்டு ஆகும்.

கட்டடத்தின் அடித்தளத்தின் உயரம் 11 அடி 6 இன்சுகள் ஆகும்.

தரைத்தளத்தின் உயரம் 14 அடியாகும்.

அடுத்த 12 மாடிகளும் தலா 11 அடியாகும்.

மொட்டை மாடியில் உள்ள மெஷின் ரூம் 19 அடி உயரம் கொண்டது.

கட்டடத்தில் மொத்தம் 5 லிப்ட்டுகள் உள்ளன. எல்.ஐ.சி கட்டடம், தென் மண்டல தலைமையகமாக திகழ்கிறது. இங்கு ஒரு கோட்ட அலுவலகம், கிளை அலுவலகம் ஆகியவையும் உள்ளன. வேறு சில நிறுவனங்களும் கட்டடத்தின் சில பகுதிகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

1959ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி அப்போதைய நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் இக்கட்டடத்தைத் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள எல்.ஐ.சி. கட்டிடத்திற்கு ஆபத்து ஒன்றும் நேராது-என்றிருந்த்து.

Related Posts

CLOSE
CLOSE
error: Content is protected !!