புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட லியோ XIV- முழு விபரம்!

உலக கத்தோலிக்க தலைவரும் புதிய போப்-பும் ஆக அமெரிக்காவை சேர்ந்த கார்டினல் ராபா்ட் பிரேவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 267வது போப் ஆகி உள்ளார்.இவர் அமெரிக்க-இத்தாலிய-ஸ்பானிஷ் மரபில் பிறந்தவர் ஆவார். வில்லநோவா பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் பட்டப்படிப் முடித்துள்ளார். பின்னர் ரோமில் உள்ள பாண்டிபிக்கல் யுனிவர்சிட்டியில் கானன் லாவில் டாக்டர் பட்டம் பெற்றார்.1985 முதல் பெருவில் பல ஆண்டுகள் பணியாற்றினார். தற்போது அவரது பெயர் லியோ XIV ஆகும். இவர் தான் கத்தோலிக்க வரலாற்றில் முதல் அமெரிக்கர் போப்பாகி உள்ளார். இவருக்கு ஆங்கிலம், ஸ்பானிஷ், இத்தாலிய, பிரஞ்சு, போர்ச்சுகீசியம் போன்ற மொழிகள் தெரியும் என கூறப்படுகிறது.
இந்த போப் தேர்வு என்பது கத்தோலிக்க திருச்சபையின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும். போப் பிரான்சிஸ் (Pope Francis) உடல்நலக் குறைவால் இறந்த நிலையில் வத்திக்கானில் உள்ள சிஸ்டைன் சேப்பலில் (Sistine Chapel) உலகெங்கிலும் உள்ள கர்தினால்கள் ஒன்று கூடி, புதிய போப்பைத் தேர்ந்தெடுக்கும் மரபு தொடர்ந்தது.
போப் தேர்வு (Papal Conclave) என்பது மிகவும் ரகசியமான மற்றும் மரபுவழி நடைமுறையாகும்.
இதன் முக்கிய அம்சங்கள்:
கர்தினால்கள்: 80 வயதுக்கு உட்பட்ட கர்தினால்கள் மட்டுமே வாக்களிக்கத் தகுதியானவர்கள். தற்போது 133 கர்தினால்கள் இந்த தேர்வில் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாக்கெடுப்பு:
ஒரு வேட்பாளர் போப்பாக தேர்ந்தெடுக்கப்பட, மொத்த வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) பெற வேண்டும். 133 கர்தினால்கள் இருந்தால், தோராயமாக 89 வாக்குகள் தேவை.
ஒரு நாளைக்கு அதிகபட்சம் நான்கு வாக்கெடுப்புகள் நடைபெறும்.
புகை அறிவிப்பு:
கரும்புகை (Black Smoke): வாக்கெடுப்பு தோல்வியடைந்தால், வாக்குச் சீட்டுகள் எரிக்கப்படும்போது கரும்புகை உருவாக்கப்படுகிறது.
வெள்ளை புகை (White Smoke): புதிய போப் தேர்ந்தெடுக்க Culminating in the election of a new pope, white smoke billows from the chimney above the Sistine Chapel, signaling the announcement of “Habemus Papam” (“We have a Pope”).
ரகசியம்: கர்தினால்கள் வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இன்றி, சிஸ்டைன் சேப்பலில் முழு ரகசியத்துடன் இந்த செயல்முறை நடைபெறுகிறது. “Extra Omnes” (எல்லோரும் வெளியே) என்ற உத்தரவுடன், கர்தினால்கள் தவிர மற்றவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.
அதன்படி முதல் நாள் (மே 7, 2025):
கர்தினால்கள் சிஸ்டைன் சேப்பலில் ஒன்று கூடினர். முதல் நாள் வாக்கெடுப்பு மாலை 9:00 மணியளவில் (வத்திக்கான் நேரம்) நடைபெற்றது.வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர், சிஸ்டைன் சேப்பலின் புகைபோக்கியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இது, எந்த வேட்பாளரும் தேவையான மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை (2/3 majority) பெறவில்லை என்பதைக் குறிக்கிறது.இந்த முதல் வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது, இது பொதுவாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான், ஏனெனில் முதல் சுற்று வாக்கெடுப்பு பெரும்பாலும் கர்தினால்களின் விருப்பங்களை ஆராயும் நோக்கில் நடைபெறுகிறது.
இரண்டாம் நாள் (மே 8, 2025):
கர்தினால்கள் மீண்டும் காலையில் ஒன்று கூடினர். இன்று இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாக்கெடுப்பு சுற்றுகள் நடைபெற்றிருக்கலாம் (வழக்கமாக ஒரு நாளைக்கு நான்கு வாக்கெடுப்புகள் வரை நடைபெறலாம்—காலை இரண்டு, மாலை இரண்டு).ஆனால், மாலை நடைபெற்ற வாக்கெடுப்பில் (நான்காவது அல்லது ஐந்தாவது சுற்று), ஒரு வேட்பாளர் தேவையான மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை (89 வாக்குகள்) பெற்று, புதிய போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெள்ளை புகை:
மாலை வாக்கெடுப்பு முடிந்தவுடன், வெள்ளை புகை வெளியானது, மேலும் புனித பேதுரு பசிலிக்காவின் மணிகள் ஒலித்தன, இது புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டதை உறுதிப்படுத்தியது.
இதை அடுத்து கத்தோலிக்க திருச்சபையின் 2,000 வருட வரலாற்றில் முதல் முறையாக ஒரு அமெரிக்கர் போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார் . போப்பாக தேர்ந்தெடுக்கப் பட்ட பிறகு, லியோ XIV வத்திகானில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவின் மைய பால்கனியில் தோன்றினார். அப்போது, உலகம் முழுவதும் இருந்து வந்திருந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் உற்சாகமாகக் கைகொட்டி அவரை வரவேற்றனர் .
நிலவளம் ரெங்கராஜன்