32°C
விளம்பரம்
Advertisement

கரூர் சம்பவம்: வதந்தி பரப்புவோர் மீது ஸ்டாலின் கண்டனம்!- வீடியோ

admin Published: September 29, 2025 2 நிமிட வாசிப்பு Updated: September 30, 2025 Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


ரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்டம்பர் 27 அன்று நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக துயரமான விபத்து நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் சுமார் 39 முதல் 41 பேர் உயிரிழந்ததாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததார்கள். இந்த நிலையில்,எந்த அரசியல் கட்சித் தலைவரும், தனது தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் இறப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள் என்றும் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக பொறுப்பற்ற கருத்துகளை தவிர்க்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சரின் வேண்டுகோள் மற்றும் அறிவிப்புகள்

கரூரில் நடந்த துயரம் குறித்த மனநிலை

  • கரூரில் நடந்த நிகழ்வை அவர் ஒரு ‘கொடும் துயரம்’ என்று குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனையில் தான் கண்ட காட்சிகள் இன்னும் மனதை விட்டு அகலவில்லை என்றும், கனத்த மனதோடுதான் இன்னும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
  • இந்தச் சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 41 உறவுகளை இழந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
  • உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்து வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
  • விசாரணை ஆணையம் அமைத்தல்
  • சம்பவத்துக்கான உண்மையான மற்றும் முழுமையான காரணத்தை ஆராய, ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
  • ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்குமென உறுதியளித்துள்ளார்.

வதந்திகள் மற்றும் விஷமச் செய்திகள் தவிர்ப்பு

  • சமூக வலைதளங்களில் சிலர் பரப்பும் வதந்திகள் மற்றும் பொய்ச் செய்திகள் குறித்துக் கவலை தெரிவித்துள்ளார்.
  • “எந்த அரசியல் கட்சித் தலைவரும், தனது தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் இறப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள்” என்று வலியுறுத்தியுள்ளார்.
  • உயிரிழந்தோர் எந்தக் கட்சியைச் சார்ந்தோராக இருந்தாலும், அவர்கள் “நம் தமிழ் உறவுகள்” என்று குறிப்பிட்டு, சோகமும், துயரமும் சூழ்ந்துள்ள இந்தச் சூழலில், பொறுப்பற்ற முறையில் விஷமத்தனமான செய்திகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான புதிய விதிமுறைகள்

  • அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தும்போது எத்தகைய பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான விதிமுறைகளை வகுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
  • நீதியரசர் ஆணையத்தின் அறிக்கை கிடைத்த பின்னர், அனைத்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி, இதற்கான விதிகள் மற்றும் நெறிமுறைகள் வகுக்கப்படும் என்றும், இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தருவார்கள் என்றும் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

அரசியலைத் தாண்டிய மானுடப் பற்று

  • “மனித உயிர்களே எல்லாவற்றுக்கும் மேலானது, மானுடப் பற்றே அனைவருக்கும் வேண்டியது” என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
  • அரசியல் நிலைப்பாடுகள், கொள்கை முரண்பாடுகள், தனிமனிதப் பகைகள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு மக்கள் நலனுக்காக அனைவரும் சிந்திக்க வேண்டும் என்றும், இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடக்காமல் தடுப்பது நம் எல்லோருடைய கடமை என்றும் அவர் தன் காணொலியில் குறிப்பிட்டுள்ளார்.

உடனடி செய்திகள்