ஐபிஎல் 2023 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுவித்த வீரர்கள் & தக்க வைத்தோர் பட்டியல் இதோ!

ஐபிஎல் 2023 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுவித்த வீரர்கள் & தக்க வைத்தோர் பட்டியல் இதோ!

பிஎல் வீரர்களுக்கான ஏலம் டிசம்பர் 23ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் இந்த ஏலமானது நடைபெறுகிறது. இந்த மினி ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப் போகும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-க்குள் சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விடுவிக்கப்படும் வீரர்கள் பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில் பிராவோ, தமிழக வீரர் ஜெகதீசன், ராபின் உத்தப்பா (ஓய்வு), கிறிஸ் ஜோர்டன், ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், பகத் வர்மா, கே.எஸ்.ஆசிப் உள்ளிட்ட 9 வீரர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி செயல்படுவார். அந்த அணி யில் மகேந்திர சிங் தோனி (C & WK), ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, அம்பதி ராயுடு, டுவைன் பிரிட்டோரியஸ், மகேஷ் தீக்ஷனா, பிரசாந்த் சோலங்கி, தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பன்டே, துஷார் தேஷ்பன் ஹங்கே , மிட்செல் சான்ட்னர், மதீஷா பத்திரனா, சுப்ரான்ஷு சேனாபதி ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!