சீன ஹேக்கர்கள் மூலம் நடந்த மும்பை சைபர் அட்டாக்!

சீன ஹேக்கர்கள் மூலம் நடந்த மும்பை சைபர் அட்டாக்!

டந்த ஆண்டு மும்பையில் அக்டோபர் 12ம் தேதி மின்சார விநியோகம் மற்றும் துறைமுகங் களில் நடந்த சைபர் தாக்குதலுக்கு சீன ஹேக்கர்கள் அனுப்பிய மால்வேர் (Malware) தான் காரணம் என அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 மே மாதத்தில் இந்தியா-சீனா இடையே எல்லை பதட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கியதால், சீன அரசு நிதியுதவியுடன் சில ஹேக்கர்கள் இந்திய மின் கட்டமைப்புகள் மற்றும் துறைமுகங்களில் தீமை விளைவிக்கும் மென்பொருளான மாலவேரை பயன் படுத்தியிருக்கலாம். இந்த இணைய ஊடுருவல் அமெரிக்க சைபர் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நிறுவனமான ரெக்கார்டட் ஃபியூச்சரால் (Recorded Future) கண்டுபிடிக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அக்டோபர் மாதம் நடந்த தாக்குதல்களால் துறைமுகங்கள், மின் கட்டமைப்பு மட்டுமல்லாமல் மும்பையில் உள்ள மருத்துவமனைகள், வணிகங்கள், பங்குச் சந்தை, வீடுகள் மற்றும் போக்குவரத்து அமைப்புகளும் பாதிக்கப்பட்டன.

மாசசூசெட்ஸை தளமாகக் கொண்ட ரெக்கார்டட் ஃபியூச்சர் நிறுவனம், இந்தியா – சீனா இடையேயான மோதலுக்கு முன்னதாகவே இந்தியாவின் மத்திய அரசாங்கம், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பொதுத் துறையை குறிவைத்து மாலவேர் தாக்குதல்கள் அதிகரிப்பதை கவனித்துள்ளது. தற்போதைய தாக்குதலுக்கு இன்னும் சில சான்றுகள் உள்ளன. இருப்பினும் சமீபத்தில் அதன் அளவு கணிசமாக குறைந்துவிட்டது என்று ரெக்கார்டட் ஃபியூச்சர் தெரிவித்துள்ளது இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், மின் துறை பாதிக்கப் படவில்லை என்பதை மத்திய மின் அமைச்சகம் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

“சில ஊடுருவல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன என்பதற்கான சான்றுகள் உள்ளன. இருப்பினும் அறிவிப்பைத் தொடர்ந்து பிப்ரவரி நடுப்பகுதியில் இந்த நடவடிக்கைகளின் கணிசமான விகிதம் நிறுத்தப்பட்டது” என்று ரெக்கார்டட் ஃபியூச்சர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கெய்ட்லின் மாட்டிங்லி திங்களன்று தெரிவித்தார்.

நியூயார்க் டைம்ஸ் தனது அறிக்கையை வெளியிட்டதிலிருந்து ரெக்கார்டட் ஃபியூச்சர் நிறுவனத்துடன் இந்திய அரசு தொடர்பு கொள்ளவில்லை. ஆனால் அறிக்கை வெளியிடுவதற்கு முன்னர் நிறுவனம் அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டிருந்ததாக மாட்டிங்லி தெரிவித்தார்.

“ஊடுருவல்களின் தொழில்நுட்ப விவரங்களை நாங்கள் இந்திய அரசாங்கத்துடன் பகிர்ந்து கொண்டோம். அவை சம்பவங்களை அடையாளம் கண்டு பதிலளிக்க அனுமதிக்கும். நாங்கள் ஒரு சம்பவம் தொடர்பான பதில்களை வழங்கும் நிறுவனம் அல்ல. நாங்கள் தாக்குதல்களை கவனித்தவுடன் அரசாங்கத்தை எச்சரித்தோம்” என்று மாட்டிங்லி தெரிவித்தார்.

error: Content is protected !!