நீட் பிஜி தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியம் – இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு!

நீட் பிஜி தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியம் – இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு!

ருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வின் பயன் பூஜ்ஜியம் தான் என்பதை, மத்திய பாஜ அரசு ஒப்புக் கொண்டுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் கட் ஆப் மதிப்பெண் ஜீரோ என குறைத்தது. தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு அர்த்தமற்றதாகிவிட்டது. ’’ என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 27-ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கிய நிலையில், தற்போது வரை 3 சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. ஆனால், நாட்டின் பல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஏராளமான மருத்துவ இடங்கள் காலியாக இருப்பதால், நீட் தகுதி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் நீட் பிஜி தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைத்து இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது. அதன்படி, நீட் பிஜி தேர்வில் ஜீரோ மதிப்பெண் எடுத்தாலும் முதுநிலை மருத்துவ படிப்பில் சேரலாம். அதாவது, மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழு அறிவிப்பு மூலம் நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் ஜீரோவாக எடுத்திருந்தாலும், எம்.டி, எம். எஸ்., படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இரண்டு சுற்று முதுநிலை மருத்துவ கலந்தாய்வு முடிந்த நிலையில், 3-ஆவது கலந்தாய்வில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், முதுநிலை மருத்துவ படிப்புக்கான 3-ஆவது சுற்று கலந்தாய்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களின் தரத்தை உறுதி செய்யவே நீட் அறிமுகப்படுத்தப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது.

நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண் எடுத்தாலும் முதுநிலை மருத்துவ படிப்பில் சேரலாம் என்ற அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நீட் தேர்வின் அர்த்தத்தையே மத்திய அரசின் அறிவிப்பு கேலிக்கூத்தாக்கி விட்டதாக கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்தாக கூறப்படுகிறது. மத்திய அரசின் அறிவிப்பால் நீட் தேர்வு நடத்தப்படுவது அர்த்தமற்றதாக மாறிவிட்டது என்றுள்ளனர்.

அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைப்பக்கத்தில், ‘’ மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வின் பயன் பூஜ்ஜியம் தான் என்பதை, மத்திய பாஜ அரசு ஒப்புக் கொண்டுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் கட் ஆப் மதிப்பெண் ஜீரோ என குறைத்தது. தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு அர்த்தமற்றதாகிவிட்டது. நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு பணம் செலுத்துவதோடு நின்றுவிடுகிறது. தகுதி என்பது தேவையற்றதாகி விடுகிறது. நீட் தேர்விற்கும் தகுதிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நீண்ட காலமாக கூறி வருகிறோம். இது எந்த உண்மையான தகுதி அளவுகோலும் இல்லாமல் வெறும் சம்பிரதாயமாகிவிட்டது. பல உன்னதமான உயிர்கள் இழந்தாலும் மனம் தளராத மத்திய அரசு தற்போது இப்படி ஒரு உத்தரவை கொண்டு வந்துள்ளது. பல உயிர்களை பழிவாங்கும் நீட் தேர்வை மத்திய அரசு நீக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!