வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு!

பழநிக்கு இணையான தலமாகப் போற்றப்படுவது சென்னையில் உள்ள வடபழநி ஆண்டவர் திருக்கோயில். சாதுக்களால் பிரதிஷ்டை செய்தப்பட்ட இந்தத் தலத்தில் வள்ளி தெய்வயானை சமேதராக மூலவர் வடபழநி ஆண்டவர் என்னும் திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார். இங்கு முருகப்பெருமான் பாத ரட்சையுடன் (காலணிகள்) அருள்பாலிப்பது விசேஷம். வடபழநி ஆண்டவரை வழிபட்டால் செல்வ வளம் சேர்வதோடு அனைத்திலும் விருத்தி கிடைக்கும். இங்குள்ள முருகப்பெருமானை வழிபட கல்யாண வரமும், பிள்ளை பாக்கியமும் கிடைக்கும். பழநிக்கு நிகரான இந்தத் தலத்தில் பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டு முடி காணிக்கை செலுத்தினால் சகல தொல்லைகளும் விலகும் என்பது நம்பிக்கை. பழநிக்கு வேண்டிக்கொண்டு செல்ல முடியாதவர்களும் இங்கே வந்து நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். இப்பேர்பட்ட அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. பதவியின் பெயர்:
எழுத்தர்
சம்பளம்:
மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
2. பதவியின் பெயர்:
அலுவலக உதவியாளர்
சம்பளம்:
மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை
3. பதவியின் பெயர்:
மடப்பள்ளி
சம்பளம்:
மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
1. தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
2. அற நிறுவனங்களின் வழக்கங்களுக்கேற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
4. பதவியின் பெயர்:
காவலர்
சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
5. பதவியின் பெயர்:
திருவலகு
சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு:
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.06.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.07.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை https://hrce.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் துணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை-26 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 19.07.2025 அன்று மாலை 6.45 மணி வரை மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும். அதன் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.