உங்களுக்கு தொப்பை விழுந்திடுச்சா? அப்ப கேன்சர் வர சான்ஸ் இருக்குது!

உங்களுக்கு தொப்பை விழுந்திடுச்சா? அப்ப கேன்சர் வர சான்ஸ் இருக்குது!

சர்வதேச அளவில் ஆண், பெண் பாகுபாடு காட்டாத உலகப் பிரச்னையாகி விட்டது தொப்பை.. தொப்பை இல்லாத நடுத்தர வயதினரை விரல் விட்டு எண்ணிவிடலாம் போலிருக்கிறது. நவீனவாழ்க்கைமுறையின் லைஃப் ஸ்டைல் பிரச்னைகள் பலவற்றுக்கும் தொப்பைதான் தோற்றுவாய் என்கிறார்கள் மருத்துவர்கள்.பழைய சோறும், பச்சைமிளகாயும், கம்பங் கூழும், கருவாட்டுக் குழம்புமாக நம் முன்னோர் உண்டுவிட்டு காட்டிலும் மேட்டிலும் உழைத்துக் கொண்டிருந்த காலத்தில் சிக்ஸ்பேக் கட்டழகு இல்லையென்றாலும், காண்பவரை கவரும் நாட்டுக் கட்டைகளாகதான் தோற்றம் அளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தொப்பையும் இல்லை. தொல்லையும் இல்லை. .முன்பெல்லாம் நாற்பது பிளஸ் அங்கிள்களுக்குதான் தொப்பை இருக்கும். இப்போது இருபது களில் இருக்கும் இளைஞர்களே தொப்பையும், தொந்தியுமாக குட்டி யானை மாதிரி திரிகிறார்கள். தொப்பையைக் குறைக்க ஆயிரக்கணக்கில் செலவு செய்து ஏதேதோ டயட் முறைகள், உடற் பயிற்சிகள் என்றெல்லாம் எடுக்கிறார்கள். பெருசாக பலனில்லை என்றுதான் தோன்றுகிறது.

இந்த தொப்பை உள்ளவர்களுக்கு உள்ளவர்களுக்கு பல்வேறு உபாதைகள் வந்து பாடு படுத்தும் நிலையில் தொந்திக்காரர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என அமெரிக்கா மிச்சிகன் மாநில பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. அமெரிக்கா மிச்சிகன் மாநில பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில் மனித உடலில் உள்ள கொழுப்பு ஒருவிதமான புரதத்தை உடலில் உருவாக்கும். இந்த புரதம் புற்றுநோய் பாதிக்காத அணுக்களை புற்றுநோய் பாதித்த அணுக்களாக மாற்றிவிடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், வயிற்றின் கீழ் பகுதியில் உள்ள கொழுப்பு அதிக அளவிலான புரதத்தை உருவாக்கி, கட்டி தோன்ற வளர்ச்சியடைய் வழிவக்கும் என்றும் கண்டுபிடித்துள்ளனர்.

”புற்றுநோயை குணப்படுத்த பல சிகிச்சை வழி முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் போதிலும், புற்றுநோயும் மனிதர்களை தாக்கும் வழிகள் அதிகரித்து வருகின்றன” என்று மிச்சிகன் மாநில பல்கலைகழக துணை பேராசிரியர் ஜேமீ பெர்னார்ட் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொப்பையுடன் உள்ளனர். அதிக கொழுப்பு காரணமாக மார்பக, பெருங்குடல், புரோஸ்டேட், கர்பப்பை, சிறுநீரக ஆகிய இடத்தில் புற்றுநோய்கள் வர வழிவகுக்கும். இதற்காக ஆராய்ச்சியாளர்கள் ஒரு எலியை வைத்து ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் எலிக்கு அதிக அளவிலான உணவுகள் வழங்கி உண்ண வைத்தனர். அது அனைத்தையும் உண்டு அதிக கொழுப்புடன் அதற்கு உடல் பருமன் ஏற்பட்டது. இதனால் ஃபைப்ரோபிளாஸ்ட் குரோத் ஃபாக்டர் (FGF2) என்னும் புரதம் அதிக அளவில் உற்பத்தியானது. இந்த புரதம் வெளிப்படுத்திய அணுக்கள் எலியின் உடலில் கட்டிகளை உருவாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.இதேபோல் ஒரு பெண்ணின் கொழுப்பு திசுக்களை எடுத்து ஆய்வு செய்தது. கொழுப்பினால் தோன்றிய புரதம் அதிக அளவிலான புற்றுநோய் உருவாக்கும் அணுக்களை உற்பத்திசெய்தது. இது எலியின் உடலில் உற்பத்தியான அணுக்களைவிட அதிகமானது என்ற அதிர்ச்சிவாய்ந்த உண்மையை கண்டறிந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

error: Content is protected !!