வர இருக்கும் மே மாசம்13 நாட்கள் இயங்காது!- வங்கிகள் விடுமுறைப் பட்டியல்!
இந்த கொரோனா யுகத்தில் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நேரத்தில் கூட பெரும் பாலான வங்கிகள் செய்லப்பட்டு வரும் சூழலில் வரும் மே மாதம் வங்கிகள் தொடர்பான பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு செய்துக்கொள்வது நல்லது. இதனால் நீங்கள் பின்னர் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதில்லை. காரணம் இந்த மே மாதம் சுமார் 13 நாட்கள் வங்கிகள் இயங்காது என்ற தகவல் வந்துள்ளது. ஆம் எந்த காரணங்களுக்காக மே மாதத்தில் 13 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் என்பதை உங்களுக்குத் தெரியப் படுத்துகிறோம்.
மே 1 தொழிலாளர் தினம், இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள வங்கிகள் மூடப்படும். மே 3 ஞாயிறு, மே 7 புத்த பூர்ணிமா, மே 8 ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள், மே 9 இரண்டாவது சனிக்கிழமை, மே 10 ஞாயிற்றுக்கிழமை, மே 17 ஞாயிற்றுக்கிழமை, இதன் காரணமாக வங்கிகள் மூடப்படும். மேலும், மே 21 ஷாப்-இ-காதர், மே 22 ஜுமத்-உல்-விதா, மே 23 நான்காவது சனிக்கிழமை, மே 24 ஞாயிறு, மே 25 ரமலான், மே 31 ஞாயிற்றுக்கிழமை என இந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை.
வங்கி மூடப்பட்ட தேதி மற்றும் காரணம்:
நாள் | மாநிலம் | விடுமுறை காரணம் |
மே 1 | அனைத்து மாநிலம் | தொழிலாளர் தினமும் |
மே 3 | அனைத்து மாநிலம் | ஞாயிறு |
மே 7 | பாட்னா, திருவனந்தபுரம், கொல்கத்தா, கொச்சி, இம்பால், பெலாப்பூர், மும்பை, நாக்பூர், பனாஜி, ஹைதராபாத், குவஹாத்தி, சென்னை, பெங்களூரு புத்த பூர்ணிமா | புத்த பூர்ணிமா |
மே 8 | கொல்கத்தா | ரவீந்திர நாத் தாகூர் ஜெயந்தி |
மே 9 | அனைத்து மாநிலங்களும் | இரண்டாவது சனிக்கிழமை |
மே 10 | அனைத்து மாநிலம் | ஞாயிறு |
மே 17 | அனைத்து மாநிலம் | ஞாயிறு |
மே 21 | ஜம்மு, ஸ்ரீநகர் | ஷாப்-இ-காதர் |
மே 22 | ஜம்மு, ஸ்ரீநகர் | ஜும்மத்-உல்-விதா |
மே 23 | அனைத்து மாநிலங்களும் | நான்காவது சனிக்கிழமை |
மே 24 | அனைத்து மாநிலம் | ஞாயிறு |
மே 25 | அனைத்து மாநிலங்களும் | ஈத்-உல்-பித்ர் (ரமலான்) |
மே 31 | அனைத்து மாநிலம் | ஞாயிறு |
இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மிகச் சில ஊழியர்கள் மட்டுமே வங்கிகளில் பணிபுரிகின்றனர். பல தனியார் வங்கிகள் தங்கள் வேலை நேரத்தில் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளன. பல தனியார் வங்கிகள் ஊரடங்கு நாட்களில் மதியம் ஒரு மணி வரை செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.