ராமேஸ்வரத்தில் கலாம் சிலை திறப்பு!

ராமேஸ்வரத்தில் கலாம் சிலை திறப்பு!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நினைவு நாளில் ராமேசுவரம் பேக்கரும்பில் அமைந்துள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் அவரது உருவ வெண்கலச் சிலை திறந்து வைக்கப்பட்டது. இதையொட்டி காலை முதலே அங்கு ஏராளமானோர் திரண்டனர். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவி கள் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் வெங்கைய்யா நாயுடு, மனோகர் பாரிக்கர், பொன்.ராதாகிருஷ்ணன், சுபாஷ் ராம்ராவ் பாம்ரே, தமிழக அமைச்சர்கள் நிலோபர் கபீல், மணிகண் டன் மற் றும் மாவட்ட கலெக்டர் நடராஜன், அன்வர்ராஜா எம்.பி. ஆகியோர் அங்கு வந்தனர்.

kalam jy 27

அவர்கள் அப்துல் கலாமின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் புதுச்சேரியை சேர்ந்த சிற்ப கலைஞர் குபேந்திரன் அமைத்திருந்த அப்துல் கலாமின் 100 முகம் கொண்ட மணல் சிற்பங்களை பார்வையிட்டனர். அதன் பிறகு சிலை திறப்பு விழா நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் வெங்கைய்யாநாயுடு, மனோகர் பாரிக்கர் ஆகியோர் சிலையை திறந்து வைத்தனர். மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சுபாஷ் ராம் ராவ் பாம்ரே, தமிழக அமைச்சர்கள் நிலோபர் கபீல், மணிகண்டன் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். தொடர்ந்து அருங் காட்சியகம், மணி மண்டபம், அறிவுசார் மையம் போன் றவை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

musem

விழாவில் அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் பேசும் போது, “உழைப்பின் மூலம் உயர்ந்தவர் கலாம், உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர், கலாமின் கனவை நினைவாக்க மத்திய அரசு பாடுபடுகிறது, திருவள்ளுவர் சிலையை ஜனாதிபதி மாளிகையில் வைத்தார்.கலாமின் கனவை நினைவாக்க மத்திய அரசு பாடுபடுகிறது”இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய வெங்கய்யா நாயுடு பேசும் போது, “கலாம் ஒரு மாறுபட்ட தலைவராக வாழ்ந்தார்.இந்தியாவின் ஏவுகணை மனிதர் அப்துல் கலாம்.அரசியல் தெரியாததாலேயே சிறந்த குடியரசு தலைவராக விளங்கினார்.அணுகுண்டு சோதனை மூலம் நாட்டின் திறனை நிரூபித்தவர்.நாட்டிற்கு அவர் ஆற்றிய தொண்டு மூலம் நம்முடன் வாழ்ந்து வருகிறார்.அப்துல் கலாம் எப்போது நம் இதயங்களில் இருப்பவர்.திருமணமாகாத கலாம் நாட்டின் வளர்ச்சியை மணம் செய்தவர்.மணி மண்டபத்துக்காக கூடுதல் இடம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒதுக்கி தந்து உள்ளார். கலாமின் பார்வையை முன்னெடுக்கும் தலைவர் பிரதமர் மோடி ஆவார்.கலாமின் கனவுகளை நினைவாக்க திட்டங்கள் கொண்டுவருகிறோம்.ராமேசுவரத்தின் வளர்ச்சிக்காககு ரூ.48 கோடி ஒதுக்கீடு செய்யபட்டு உள்ளது.

அப்துல்கலாம் காட்டிய பாதையில் நாம் பயணிக்க வேண்டும்.அவருடைய புத்தகங்கள் இளைஞர்களை ஊக்கப்படுத்தின.மாநில அரசுடன் இணைந்து நாங்கள்.செயல்படுவோம்.சிறந்த வசதிகளுடன் நினைவிடம் அமைக்கப்படும்.அப்துல் கலாம் பிறந்த கர்ம பூமி ராமேசுவரம் ஆகும். மக்களால் நேசிக்கப்பட்ட குடியரசு தலைவர் அப்துல்கலாம்.வருங்கால இளைஞர்களுக்கு இது ஒரு வழிபாட்டு தலமாக விளங்கும்” என்றார்

error: Content is protected !!