32°C
விளம்பரம்
Advertisement

ஒன்ஸ் மோர்: பழைய கதையில் தடுமாறிய புதுமுக இயக்குநர்!

admin Published: August 29, 2026 2 நிமிட வாசிப்பு Updated: August 30, 2026 Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


டந்த காலக் கசப்பான சம்பவங்களால் மன அழுத்தத்தில் வாழும் ரகுவரனின் (அர்ஜுன் தாஸ்) வாழ்வில், பள்ளித் தோழி அஞ்சலி (அதிதி சங்கர்) நுழைகிறாள். அவனது நிராகரிப்புகளையும் தாண்டி அன்பால் அவனை மாற்றுகிறாள். இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயம் வரை செல்லும் வேளையில், ரகுவரனின் பழைய காதலி இந்திரா (சோனா ஒலிக்கல்) திடீரென போன் செய்து அவனைச் சந்திக்கிறாள். கொச்சியில் படித்த காலத்தில் தீவிரமாகக் காதலித்து, ஒரே இரவில் அவனைக் கைவிட்டுச் சென்ற இந்திரா, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்து தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு அழைக்கிறாள். இறுதியில் ரகுவரன் யாரைத் தேர்ந்தெடுத்தான் என்பதே மீதி கதை.

நடிப்பு மற்றும் கதாபாத்திரங்கள்

அர்ஜுன் தாஸ்: வழக்கம் போலத் தனது இறுக்கமான குரலாலும் சோகமான முகத்தாலும் கதாபாத்திரத்தை எதிர்கொண்டிருக்கிறார். முதல் பாதியில் விரக்தி, இரண்டாம் பாதியில் ரொமான்ஸ் என இரண்டிலுமே அவரது முகத்தில் அதே அமைதியும் சோகமுமே மேலோங்கி நிற்கிறது.

அதிதி ஷ்ங்கர்: தன் துடிப்பான நடிப்பால் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார். நிராகரிப்புகளைச் சாதாரணமாகக் கடந்து, நாயகனைத் துரத்தித் துரத்திக் காதலிக்கும் பாத்திரத்தில் இயல்பான உடல்மொழியால் மிளிர்கிறார்.

சோனா ஒலிக்கல்: அறிமுக நடிகையான இவருக்குப் பெரிய வேலை எதுவுமில்லை. அவர் காதலித்ததற்கும், பிரிந்ததற்கும், மீண்டும் வந்ததற்கும் திரைக்கதையில் வலுவான காரணங்கள் இல்லாததால் கதாபாத்திரத்தோடு ஒட்ட முடியாமல் போகிறது.

பிற நடிகர்கள்: டிராவிட் செல்வம், அனுஷா பிரபு, ஜகபர், மோனிஷ் எலமாரன், வர்ணிகா வரத், அருண்குமார் மணி, செளந்தர்யா மனோகரன் ஆகியோர் தமக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் செய்து முடித்திருக்கிறார்கள்.

தொழில்நுட்பப் பங்களிப்பு

இசை (ஹேஷாம் அப்துல் வஹாப்): படத்திற்கு மிகப்பெரிய பலம். பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். தொய்வடையும் திரைக்கதைக்கு இவரது பின்னணி இசையும் பாடல்களும் பெருமூச்சு விட வைக்கின்றன.

ஒளிப்பதிவு (அரவிந்த் விஸ்வநாதன்): நாயகனின் மனநிலையைப் போலவே படம் முழுவதும் பொலிவற்ற மற்றும் எளிமையான காட்சிகளையே தருகிறது.

படத்தொகுப்பு (நாஷ்): முதல் பாதியில் நாயகியின் காதல், இரண்டாம் பாதியில் நாயகனின் காதல் எனப் பிரித்திருந்தாலும், எந்தவித ஈர்ப்பும் இல்லாமல் காட்சிகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

இயக்கம் மற்றும் இறுதிப் பார்வை

ஆயிரக்கணக்கான சினிமாக்களில் பார்த்துச் சலித்த அதே பழைய காதலைத் தான் இயக்குநர் கையில் எடுத்திருக்கிறார். கேரக்டர்களுக்கான பின்னணியையும் அவர்களின் உணர்வுகளையும் சரியாகக் கையாண்டிருந்தால்  இது மனதுக்கு நெருக்கமான படமாக மாறியிருக்கக் கூடும். குறிப்பாகச் இரண்டாம் பாதியில் வரும் காதல் மற்றும் பிரிவில் எந்தவித அழுத்தமும் இல்லாதது படத்தின் மிகப்பெரிய பலவீனம்.

ரேட்டிங்: 2 / 5

உடனடி செய்திகள்