தேசிய ஓபன் தடகளம்: 100 மீட்டர் தடை ஓட்டத்தில் காயத்ரி முதலிடம்!

தேசிய ஓபன் தடகளம்: 100 மீட்டர் தடை ஓட்டத்தில் காயத்ரி முதலிடம்!

53-வது தேசிய ஓபன் தடகள போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை காயத்ரி 13.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். இவர் சர்வதேச அளவில் 20, தேசிய அளவில் 150, மாநில அளவில் 200, உள்ளூர் போட்டிகள் என மொத்தம் 400க்கும் மேல்.வாங்கியவர் என்பது பெருமைக்குரிய விஷயம்.மேலும் ஆசிய தடகள போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்ட காயத்ரி தனது திறமையை மீண்டும் நிரூபித்து காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
sep 10 Gayathri- sports
இதற்கிடையில்தமிழகத்தை சேர்ந்த எல்.ஐ.சி. வீராங்கனை ஹேமாஸ்ரீ 14.19 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார். அத்துடன் ரெயில்வே வீராங்கனை அஞ்சு 14.31 வினாடியில் கடந்து வெண்கலப்பதக்கம் பெற்றார். ஆண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர் பாலமுருகன் வெண்கலப்பதக்கம் வென்றார்.

Related Posts

error: Content is protected !!