மீடூ எதிரொலி: நடிகர் சங்கத்தில் பாலியல் புகாரை விசாரிக்க விசாகா கமிட்டி!

மீடூ எதிரொலி: நடிகர் சங்கத்தில் பாலியல் புகாரை விசாரிக்க விசாகா கமிட்டி!

பாலியல் புகார்களை விசாரிக்க நடிகர் சங்கத்தில் விசாகா கமிட்டி அமைக்க நடிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம். மீடூ விவகாரம் பெரிதாக வெடித்து கிளம்பி வரும் நிலையில் நடிகர் சங்கத்தில் விசாகா கமிட்டி அமைக்கப்படவேண்டும் என்கிற கோரிக்கை வலுத்தது. இந் நிலையில் இன்று கூடிய நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில் நடிகர் சங்கத்தில் பாலியல் புகாரை விசாரிக்க விசாகா கமிட்டி அமைக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் இன்று நடந்த சிறப்பு செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதோ:

1.அங்கத்தினர்களுடைய உரிமைகளையும் சுயமரியாதையையும் காப்பாற்றும் வகையில் ஏற்கனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தில் சட்டங்கள் இருந்தாலும், நீதிமன்றத்தால் பரிந்துரை செய்யப்பட்ட ‘விசாகா குழு’ செயல்படும் சட்டங்களின் அடிப்படையில் குழு ஒன்று உருவாக்கப்படும்.

இதில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளோடு பெரும்பான்மை மகளிரும் உட்பட்ட குழுவாக அமையும். பிரச்சனைகளை உளவியல் ரீதியாக அலசி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க மனநல மருத்துவர் ஒருவரும் அதில் இடம் பெறுவார். அதற்க்கு ஆண்பால், பெண்பால் பாகுபாடின்றி பிரச்சினைகளை நடு நிலையோடு அணுகி தீர்வுகளை எடுக்கும்.

2. படப்பிடிப்பு தளங்களில் ஏற்படும் சகல பிரச்சனைகளை உடனடியாக தீர்த்து வைக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், இயக்குனர்கள் சங்கம் உள்ளிட்ட உயர்மட்ட குழு ஒன்றை அமைக்கவும் பரிந்துரை செய்கிறது.

இவ்வாறு அதன் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!