நான் எடுத்த , நடித்த படங்களிலேயே இதுதான் சிறப்பானது – சமுத்திரக்கனி பெருமிதம்!

நான் எடுத்த , நடித்த படங்களிலேயே இதுதான் சிறப்பானது – சமுத்திரக்கனி பெருமிதம்!

பிராமி ராமநாதன் தயாரிப்பில் சமுத்திரக்கனி இயக்கி நடித்துள்ள ‘விநோதய சித்தம்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் அரங்கில் நடைபெற்றது. படத்தின் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் , நடிகர் சமுத்திரக்கனி , நடிகை சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்று பேசினர்.

இந்நிகழ்ச்சியில் சமுத்திரக்கனி பேசியது :

இந்த படத்தில் நடித்த பிறகு உளவியல் ரீதியாக எனக்குள் மாறுதல் ஏற்பட்டு விட்டது. இனி பேச்சை குறைக்க முடிவு செய்து விட்டேன் . 18 ஆண்டுகளுக்கு முன்பு கே.பாலசந்தருடன் நாடகம் ஒன்று பார்த்தேன். அதிலிருந்து உருவானதுதான் விநோயதய சித்தம். நான் எடுத்த , நடித்த படங்களிலேயே இதுதான் சிறப்பான பதிவு என மனதார செல்கிறேன்.

சஞ்சிதா ஷெட்டி

படத்தில் தம்பி ராமையா எனது தந்தையாக நடித்துள்ளார். சமுத்திரக்கனி அருகில் நின்று நடிக்கவே பயமாக இருக்கும் . 9ம் வகுப்பு படிக்கும்போது எனது அப்பாவுக்கு விபத்து ஏற்பட்டது. அப்பாவுக்கு விருப்பமானவரை தான் திருமணம் செய்து கொள்ளுவதாக எனது தங்கை சொன்னார். அதுபோன்றே இந்த படத்தின் கதையும் இருந்தது. என் தம்பி 9 ஆண்டாக ஒரு பெண்ணை விரும்பினான். என் தந்தை சாதி பிரச்சனையால் தம்பியின் காதலை ஏற்கவில்லை. திருமணம் செய்தால் அந்த பெண்ணைதான் திருமணம் செய்வேன் என உறுதியாக இருந்து அப்பாவை சம்மதிக்க வைத்து அதே பெண்ணை திருமணம் செய்தான். இதுவும் படத்தின் கதையில் இருக்கிறது. இந்த படத்தின் 80 சதவீத கதை என் வாழ்வில் நடந்த சம்பவங்கள் போலே அமைந்துள்ளது.

அபிராமி ராமநாதன்

சினிமாகாரனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். கலையின் தலைமகனாக இருப்பது சினிமா , கவலையில் வ ‘ வை எடுத்து விட்டால் கலை என்று வரும் . சிறிய வயதில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பெண் பிள்ளை விரலை பிடித்து நடிக்க வேண்டும் என்பதால் என் ஆத்தாள் என்னை நடிக்க அனுமதிக்கவில்லை. அப்போதே நடித்திருந்தால் சூப்பர் ஸ்டார் கூட ஆகியிருப்பேன்.

வஞ்சிக்கோட்டை வாலிபன் பட விநியோகஸ்தர் எனது அப்பாதான். 5 ம் வகுப்பு படிக்கும்போதே சினிமா எனக்கு அறிமுகமாகிவிட்டது. அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்லாமல் உள்ளூரிலே படத்தை குறைந்த செலவில் எடுத்து கொடுத்து விட்டார் சமுத்திரக்கனி.

திரைப்படங்களுக்கு 13..14 வயதிலேயே புகைப்படக்காரனாக இருந்தேன் . சினிமா என்பது புலி வாலை பிடித்த மாதிரி. என் மனைவிதான் எனக்கு வழிகாட்டி. இந்த தொழிலில் நான் முன்னேற காரணம் என் மனைவிதான். கே. பாலசந்தர் , பாரதிராஜாவை சமுத்திரக்கனி வடிவில் பார்க்கிறேன். தேசிய விருதையும் , ஆஸ்கரையும் கூட இந்த படம் பெறக்கூடும். எங்கள் பரம்பரையில் வந்த கண்ணதாசன் பாடிய ‘ கொடுத்ததெல்லாம் கொடுத்தான்…உனக்கா கொடுத்தான் ,ஊருக்காக கொடுத்தான்..’ என்பதை உணர்ந்து செயல்படுகிறேன் ” என்று கூறினார்.

விநோதய சித்தம் திரைப்படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் அக்டோபர் 13ம் வெளியாக உள்ளது.

Related Posts

error: Content is protected !!