ஒலிம்பிக் ;10 லட்சம் பேர்களின் கட்டணம் திருப்பி கொடுக்கப்படும்!

ஒலிம்பிக் ;10 லட்சம் பேர்களின் கட்டணம் திருப்பி கொடுக்கப்படும்!

ர்வதேச அளவில் சுறுசுறுப்புக்கு பேர் போனவர்கள் என்றழைக்கப்படும் ஜப்பான் நாட்டில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு வரும் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதிவரை ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ள நிலையில் ஒலிம்பிக் போட்டிக்காக வெளிநாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் வாங்கிய டிக்கெட் கட்டணத்தைத் திருப்பிக் கொடுப்பதாக போட்டி அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

ஜப்பான் கேப்பிடலான டோக்கியோவில், ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதிவரை ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன. போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.இந்த நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால், ஜப்பான் ஒலிம்பிக் போட்டியைக் காண , வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.இப்போட்டி குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ஜப்பான் அரசு, சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி மற்றும் உள்ளூர் போட்டி அமைப்பாளர்கள் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தியபோது, இந்த முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இதை அடுத்து ஒலிம்பிக் போட்டிக்காக வெளிநாடுகளைச் சேர்ந்த ரசிகர்களுக்காக 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த டிக்கெட் கட்டணத்தைத் திருப்பிக் கொடுப்பதாக போட்டி அமைப்பாளர்கள் கூறியுள்ளனர். இதேபோல் உள்நாட்டு ரசிகர்களுக்காக 44.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. போட்டி நடைபெறும் மைதானங்களில் உள்நாட்டு பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்பான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாயக் கூடும்

error: Content is protected !!