சோஷியல் மீடியா & ஓடிடி தளங்களுக்கு கிடுக்குப்பிடி!- மோடி அரசு அதிரடி!

சோஷியல் மீடியா & ஓடிடி தளங்களுக்கு கிடுக்குப்பிடி!- மோடி அரசு அதிரடி!

ஆன் லைன் எனப்படும் மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeITY) சமூக ஊடக நிறுவனங்களான  ஃபேஸ்புக், ட்விட்டர், ஓடிடி தளங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் மற்றும் டிஜிட்டல் மீடியா வெளியீட்டாளர்களுக்கு புதிய வழி காட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அண்மையில் குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் தொடர்பாக பலரும் ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தனர். இது விவசாயி கள் பிரச்சினை தொடர்பாக 1500 ட்விட்டர் கணக்குகளை முடக்க ட்விட்டர் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. இதில் ட்விட்டர் நிறுவனத்துக்கும், அரசுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. இந்தி சட்டங்களுக்கு கட்டுப்படாவிட்டால் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என அரசு எச்சரித்ததை யடுத்து, ட்விட்டர் நிறுவனம் பணிந்தது. இந்த சம்பவத்துக்குப் பின் இந்த வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. இது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்த போது சொன்னவை:.

, “நாங்கள் எந்த புதிய சட்டத்தையும் உருவாக்கவில்லை. தற்போதுள்ள தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் இந்த விதிகளை நாங்கள் வகுத்துள்ளோம், இந்த விதிமுறைகளைப் பின் பற்றுவதற்கான தளங்களை நாங்கள் நம்புகிறோம். சமூக வலைத்தளங்களை தவறாகப் பயன்படுத்துவதும், போலியான செய்திகளை வெளியிடுவது பெரிய கவலையை ஏற்படுத்தி யுள்ளது. இந்தியாவில் சமூக வலைத்தள நிறுவனங்கள் தொழில் செய்ய வரவேற்கப் படுகின்றன, இந்தியர்களுக்கு அதிகாரம் அளிப்பதும் வரவேற்கப்படுகிறது. விமர்சனங்களையும், எதிர்ப்புகளும் மத்திய அரசு வரவேற்கிறது.

இத்தனைக்கும்  இந்தியாவில் வாட்ஸ்-அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 53 கோடி. யூடியூப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 44.8 கோடி, முகநூல் 41 கோடி, இன்ஸ்டாகிராம் 21 கோடி, ட்விட்டர் 1.75 கோடி மட்டுமே உள்ளார்கள்

இதில்  ஆபாசமான புகைப்படங்கள் குறித்து தகவல் அளித்த 24 மணி நேரத்திற்குள் அதனை சமூக வலைதளங்கள் நீக்க வேண்டும். ஒவ்வொரு சமூக வலைதள நிறுவனங்களும் மாதம் ஒருமுறை எவ்வளவு புகார்கள் வருகிறது என்பது சம்பந்தமான விரிவான தகவல்களை வழங்க வேண்டும். புகார்களைக் கையாள்வதற் காக ஒவ்வொரு சமூக வலைதள நிறுவனங்களும் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும். ஒரு தவறான தகவல்களை பரப்பக்கூடிய முதல் நபர் யார் என்ற விஷயங்களை சமூக வலை தளங்கள் கட்டாயம் கண்டறிய வேண்டும். அந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை கிடைக்கும் வழக்குகளாக எடுத்துக்கொள்ளப்படும். அரசோ அல்லது நீதிமன்றமோ அது குறித்த தகவல்களைக் கேட்டால் நிச்சயம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விதிகள் கெஜட்டில் வெளியிடப்பட்ட 3 மாதங்களுக்குப் பிறகு அவை நடைமுறைக்கு வரும்.

அத்துடன், பயனர்களிடமிருந்து வரும் புகார்களைத் தீர்க்க சமூக ஊடக நிறுவனங்கள் ஒரு பொறியமைப்பு (mechanism) கொண்டிருக்க வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது. சட்டம் மற்றும் விதிகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கு பொறுப்பான தலைமை இணை அதிகாரி. அத்தகைய நபர் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும். சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் 24×7 ஒருங்கிணைப்புக்கான நோடல் தொடர்பு நபர். அத்தகைய நபர் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும். குறை தீர்க்கும் பொறிமுறையின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள செயல்பாடுகளைச் செய்யும் குடியுரிமை குறை தீர்க்கும் அதிகாரி. அத்தகைய நபர் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும். OTT உள்ளடக்கத் தளங்கள்! OTT இயங்குதளங்கள் மற்றும் டிஜிட்டல் போர்ட்டல்களுக்கும் குறை தீர்க்கும் முறைக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

மொத்தத்தில் இந்த அரசாங்கம் OTT தளங்களை சுய ஒழுங்குமுறைக்கு உட்படுத்த வேண்டும் என விரும்புகிறது. படங்களுக்கு தணிக்கை முறை இருக்கும்போது, ​​OTT இயங்குதளங்கள் அவற்றின் திரைப்படங்களையும் உள்ளடக்கத்தையும் வயது அடிப்படையில் சுயமாக வகைப்படுத்த வேண்டும். வயது தகுதியின் அடிப்படையில் உள்ளடக்கத்தை வகைப்படுத்த வேண்டும். 13+, 16+ மற்றும் பெரியவர்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களை வகைப்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது, மேலும் இந்த தளங்களுக்கு எந்தவிதமான தணிக்கைகளையும் கொண்டு வரவில்லை என்பதை தெளிவுப்படுத்தி இருக்கிறது..

Related Posts

error: Content is protected !!