32°C
விளம்பரம்
Advertisement

Tag: <span>campaign</span>

வேட்பாளர்கள் & நாட்டு மக்களுக்கோர் புத்தம் புது விதிமுறைகள் இதோ! Exclusive

வேட்பாளர்கள் & நாட்டு மக்களுக்கோர் புத்தம் புது விதிமுறைகள் இதோ!

தமிழ்நாட்டில் நாளை (ஏப்.17) மாலை 6 மணி முதல் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக் கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக மக்களவைப் பொதுத் தேர்தல்கள், 2024 மற்றும் விளவங்கோடு (233) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.19 அன்று காலை 7 […]

April 16, 2024 admin
உள்ளாட்சித் தேர்தல் _ ஓய்ந்தது பரப்புரை! சனிக்கிழமை வாக்குப் பதிவு! Exclusive

உள்ளாட்சித் தேர்தல் _ ஓய்ந்தது பரப்புரை! சனிக்கிழமை வாக்குப் பதிவு!

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் தமிழகத்தில் வரும் சனிக்கிழமையன்று நடக்க இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது. இந்நிலையில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் 26ஆம் தேதி வெளியானது. மனுத்தாக்கல் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 4ஆம் தேதி வரை மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 5இல் வேட்புமனுக்கள் […]

February 17, 2022 admin
பிரியங்கா காந்தியின் தமிழக வருகை ரத்து!- ஏன் தெரியுமா? வீடியோ Exclusive

பிரியங்கா காந்தியின் தமிழக வருகை ரத்து!- ஏன் தெரியுமா? வீடியோ

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் அசாம், மேற்குவங்கத்தில் 2 கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் தமிழகம், புதுவை மற்றும் கேரளாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனிடையே தேசிய தலைவர்களும், கூட்டணி கட்சி தலைவர்களும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரங்களிலுன், பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டு வருகின்றனர். இதனிடையே நாடெங்கும்கொரோனா இரண்டாம் அலை […]

April 2, 2021 admin
மனம் திறந்த மன்னிப்பைக் கோருகிறேன் – ஆ.ராசா Exclusive

மனம் திறந்த மன்னிப்பைக் கோருகிறேன் – ஆ.ராசா

தமிழகத் தேர்தல் பரப்புரையின் போக்கை மாற்றிய அ.ராசா இன்று நீலகிரியில் “முதலமைச்சர் எனது பேச்சால் காயப்பட்டு, கலங்கினார் என்ற செய்தியை செய்தித்தாள்கள் வாயிலாகப் படித்து மிகுந்த மனவேதனை அடைகிறேன். இடப்பொருத்தமற்று சித்தரிக்கப்பட்டு, தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட எனது பேச்சிற்காக எனது அடிமனதின் ஆழத்திலிருந்து வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். முதல்வர் பழனிசாமி அரசியலுக்காக அல்லாமல், உள்ளபடியே காயப்பட்டிருப்பதாக உணருவாரேயானால் மனம் திறந்த மன்னிப்பைக் கோருவதில் எனக்கு சிறிதும் தயக்கமில்லை” என்று கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபைத் […]

March 29, 2021 admin
முதல்வர் பழனிசாமி தொகுதியான எடப்பாடியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அதிரடி பரப்புரை! Exclusive

முதல்வர் பழனிசாமி தொகுதியான எடப்பாடியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அதிரடி பரப்புரை!

தமிழகமெங்கும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று பிரச்சாரம் செய்தார். பின்னர் இன்று சேலம் வந்து தனியார் ஓட்டலில் தங்கிய சூழலில் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓட்டலுக்குச் சென்று நேரில் சந்தித்தார். அப்போது அவரை ஓ பி எஸ் பொன்னாடை போர்த்து வரவேற்றார். பின்னர் இருவரும் தனி […]

March 24, 2021 admin
ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரை சுவாரஸ்யங்கள்!- வீடியோ Exclusive

ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரை சுவாரஸ்யங்கள்!- வீடியோ

நடைபெறவுள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், அ.தி.மு.க.சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், தமிழ் நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடந்த மார்ச் 17 அன்று தனது தேர்தல் பரப்புரையை துவங்கியவர் நேற்று மார்ச் 21 அன்று தனது தொகுதியான போடிநாயக்கனுர் சட்டமன்ற தொகுதியில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்த ஓ. பன்னீர்செல்வம், கடந்த திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குகள் […]

March 22, 2021 admin
சட்டமன்றத் தேர்தல் பிரசார பரப்புரை- முதல்வர் பழனிசாமி நாளை தொடங்குகிறார்! தமிழகம்

சட்டமன்றத் தேர்தல் பிரசார பரப்புரை- முதல்வர் பழனிசாமி நாளை தொடங்குகிறார்!

இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. ஆனால், அதிமுக அதிகாரப்பூர்வமாக பிரச்சாரத்தை தொடங்காவிட்டாலும், மாவட்ட வாரியாக, அரசு நிகழ்ச்சிகள் மூலம் அரசின் சாதனைகளை சொல்லி, மறைமுகமாக பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மேற்கொண்டு வந்தனர். இந் நிலையில், அ.தி.மு.க.வின் தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். இது குறித்து சேலத்தில் செய்தியாளர்களைச் […]

December 18, 2020 admin
பிரசாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு பதிவாயிடுச்சு! Running News

பிரசாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு பதிவாயிடுச்சு!

இந்திய அளவில் பல்வேறு கட்சிகளில் பேசு பொருளாகி விட்டவரும் பிரபல தேர்தல் வியூக வல்லுநர் என்று சொல்லப்படுபவருமான பிரசாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐபேக் நிறுவனத்தின் தலைவரும், பிரபல தேர்தல் வியூக வல்லுநருமான பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் பணியாற்றி உள்ளார். சமீபத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்றி, ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற உதவினார். இதைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் திமுகவுடன் கைகோர்த்துள்ளார். இதனிடையே […]

February 27, 2020 admin
பாங்காங்-கில் சாலையோர உணவகங்களுக்கு தடை! உலகம்

பாங்காங்-கில் சாலையோர உணவகங்களுக்கு தடை!

தாய்லாந்து தலைநகர் பாங்காக் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் நகரமாக இருந்து வருகிறது. இங்குள்ள முக்கிய சாலைகளின் ஓரத்தில் ஏராளமானவர்கள் சின்னச் சின்ன உணவகங்கள் அமைத்துள்ளனர். மேலும், சாலையோரத்தில் ஆடைகள் விற்பனை செய்து வருகிறார்கள். போலிப் பொருள்களும் அதிக அளவில் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. பாங்காங் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சாலையோரக் கடைகளில் அதிக அளவில் பணம் செலவிட்டு வருகிறார்கள். இந்நிலையில், நகரை தூய்மையாக்கும் திட்டத்தின் கீழ், பாங்காக்கில் முக்கிய சாலையோரங்களில் உள்ள கடைகளை அகற்ற […]

April 18, 2017 admin
மது போதைக்கு எதிரான தேசிய மக்கள் இயக்கம் ! இந்தியா

மது போதைக்கு எதிரான தேசிய மக்கள் இயக்கம் !

இந்தியாவில் சுமார் 75% ஆண்கள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் மது அருந்துகின்றனர். இதில் 20-30% பேர் அதற்கு முழு அடிமையாகிறார்கள். குடிப்பழக்கம் பெரும்பாலும் 15-25 வயதில்தான் ஆரம்பிக்கிறது. 50-60% சாலை விபத்துகள் குடிபோதையினால்தான் ஏற்படுகின்றன. மது குடிப்பது முதலில் சாதாரணப் பழக்கமாகத்தான் ஆரம்பிக்கும். ஆரம்பிக்கும்போதே யாரும் முழு பாட்டிலையும் குடிப்பதில்லை, குடிக்கவும் முடியாது. சில மாதங்கள் அல்லது வருடங்களில் மூளையில் ஆல்கஹால் சில ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதன் காரணமாக, சாதாரண போதையைத் தருவதற்குக்கூட அதிக அளவு […]

July 12, 2016 admin
உடனடி செய்திகள்