முறை தவறிய உறவில் பிறந்த குழந்தைகளுக்கு சொத்துரிமை – சுப்ரீம் கோர்ட் புது உத்தரவு!

முறை தவறிய உறவில் பிறந்த குழந்தைகளுக்கு சொத்துரிமை – சுப்ரீம் கோர்ட் புது உத்தரவு!

ந்து வாரிசு சட்டத்தின்படி, செல்லாத அல்லது உறவு முறிந்த திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும் பெற்றோரின் பூர்விக சொத்தில் உரிமை உள்ளது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு திருமண பந்தம் அல்லாது, திருமண முறிவு ஆகியவற்றால் பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் சொத்தில் மட்டும் உரிமை உள்ளதா அல்லது பெற்றோரின் பூர்விக சொத்தில் உரிமை உள்ளதா என்ற பல்வேறு சட்டக் கேள்விகள் அடங்கிய வழக்கை உச்சநீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வு, கூடுதல் அமர்வுக்கு பரிந்துரைத்தது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பை வெளியிட்டது.

அதில், ‘செல்லாத அல்லது உறவு முறிந்த திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகளாக இருந்தாலும் அவர்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் உள்ளது. திருமண உறவு முறிந்திருந்தாலும் அந்தக் குழந்தைகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் உள்ளதால் அவர்களுக்கு சொத்தில் உரிமை உள்ளது என இந்து திருமண சட்டப் பிரிவு 16 (1) (2) இல் கூறப்பட்டுள்ளது.இந்து வாரிசு சட்டப் பிரிவு 6-இன் படி, உயிரிழப்பதற்கு முன்பு நடைபெறும் பூர்விக சொத்தின் பாகப் பிரிவினையின்போது, இந்து ஒருங்கிணைந்த குடும்பத்தினருக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல, செல்லாத அல்லது உறவு முறிந்த திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகள், அவர்களது பெற்றோர் உயிரிழந்தாலும் அவர்களின் பூர்விக சொத்தில் பங்கு பெற ஆண், பெண் இருவரும் சட்டபூர்வ அங்கீகாரம் உள்ளது.

இந்து மிதாக்ஷரா சட்டத்தின் கீழ் வரும் இந்து ஒருங்கிணைந்த குடும்ப சொத்துகளுக்கு மட்டும் இந்தத் தீர்ப்பு பொருந்தும்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர். செல்லாத அல்லது உறவு முறிந்த திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோரின் பூர்விக சொத்துகளில் உரிமை இல்லை என்று சுப்ரீம் கோர்ட் இரண்டு நீதிபதிகள் அளித்த உத்தரவுக்கு மாறுபட்டு மூன்று நீதிபதிகள் தற்போது தீர்ப்பு அளித்துள்ளனர். இதுபோன்ற குழந்தைகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் உள்ளது என்றும் சுப்ரீம் கோர்ட் தெளிவுபடுத்தி உள்ளது.

error: Content is protected !!