இந்திராவின் கணவரும், ராஜிவ் காந்தியின் தந்தையுமான பெரோஸ் காந்தியின் பிறந்த தினமின்று!

இந்திராவின் கணவரும், ராஜிவ் காந்தியின் தந்தையுமான பெரோஸ் காந்தியின் பிறந்த தினமின்று!

யற்பெயர் பெரோஸ் ஜகாங்கீர் காந்தி (Feroze Jehangir Ghandy). பார்சி சமுதாயத்தை சேர்ந்த பெரோஸ் காந்தி, 1912ல் செப்டம்பர் 12ம் தேதி பம்பாயில் பிறந்தவர். இவரது தந்தை ஜகாங்கீர் பரீதூன் காந்தி மரைன் இன்ஜினியராக பணியாற்றி வந்தவர். வீட்டில் 5 குழந்தைகளில் கடைசி மகன் இவர். இவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் இருந்தனர். 1920களின் ஆரம்பிக் காலக்கட்டத்தில் பெரோஸ் காந்தியின் தந்தை மறைவிற்கு பிறகு, மொத்த குடும்பமும் அலகாபாத்-க்கு குடிபெயர்ந்தனர். அங்கு, சர்ஜனாக பணியாற்றி வந்த திருமணமாகாத அத்தை ஒருவரின் வீட்டில் வசித்து வந்தனர்.1930ல் பெரோஸ் காந்தி காங்கிரஸின் இளைஞர்கள் சுதந்திர போராட்ட அணியான வானர் சேனாவில் தன்னை இணைத்துக்கொண்டார். அப்போது தான் அலகாபாத்தில் இருந்த ஈவிங் கிறிஸ்துவ கல்லூரி அருகே ஒரு மறியல் போராட்டம் நடந்து வந்தது.

அந்த போராட்ட களத்தில் தான் முதல் முறையாக பெரோஸ் காந்தி, கமலா நேரு மற்றும் இந்திரா காந்தியை சந்தித்தார். அங்கே, வெயிலின் தாக்கத்தில் சோர்ந்திருந்த கமலா நேரு போன்ற போராட்டக்களத்தில் இருந்தவர்களுக்கு பெரோஸ் காந்தி மற்றும் அவரது நண்பர்கள் துணையாக இருந்து உதவிகளை செய்தனர்.இப்போராட்டத்தின் மறுநாளே பெரோஸ் காந்தி தனது கல்வியை கைவிட்டு, இந்திய சுதந்திர போராட்டக்களத்தில் முனைப்புடன் இறங்கினர். மகாத்மா காந்தியின் பேரில் கொண்ட பேர் ஈர்ப்பின் காரணத்தால், தனது உப பெயரான Ghandy-ஐ, Gandhi என மாற்றிக் கொண்டார் பெரோஸ் காந்தி.

1930ல் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பிரதம மந்திரியான லால் பகதூர் சாஸ்திரி உடன் போராட்டத்தின் போது கைதாகி, பைசாபாத்-ல் 19 மாதங்கள் சிறையில் இருந்தார். வெளியான உடனே மீண்டும் விவசாயிகளுடன் ஐக்கிய மாகாணத்தில் (தற்போதைய உத்திர பிரதேசம்) ஒரு போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட பெரோஸ் காந்தி 1932 மற்றும் 1933ல் இரண்டு முறை கைதாகி சிறைக்கு சென்றார். இச்சமயத்தில் தான் பெரோஸ் காந்தி நேரு குடும்பத்துடன் நெருங்கி பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே 1933ல் இந்திராவிடம் பிரபோஸ் செய்தார் பெரோஸ் காந்தி. ஆனால், அச்சமயத்தில் இந்திரா காந்தி வெறும் 16 வயது பெண் என்பதால் கமலா நேரு மறுத்துவிட்டார். அந்த காலக்கட்டத்தில் கமலா நேரு காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

அப்போது பெரோஸ் காந்தி அவரது உடல்நலம் சார்ந்து அருகே இருந்து நிறைய உதவிகள் செய்து வந்தார். மருத்துவ சிகிச்சைக்காக ஐரோப்பா சென்று வந்த போதும் கமலா நேருவிற்கு பெரோஸ் காந்தி உதவியாக இருந்தார். கமலா நேரு மீது பெரோஸ் காந்தி செலுத்திய அன்பினால் நேருவின் மனம் கவர்ந்தார். 1936ல் கமலா நேரு உடல்நலம் மிகவும் குன்றி மரணமடைந்தார். பிறகு, 1940ன் ஆரம்பக் காலக்கட்டத்தில் பெரோஸ் காந்தி மற்றும் இந்திரா காந்தி இருவரும் இங்கிலாந்தில் இருந்த போது, இவரை இடையே நெருக்கம் அதிகரித்தது. இதன் விளைவாக 1942ல் இருவரும் இந்துமத சடங்கு முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.

ஆனால் நேருவிற்கு பெரோஸ் – இந்திரா காந்தியின் திருமணத்தில் விருப்பம் இருக்கவில்லை. மேலும், 1942 ஆகஸ்ட் மாதம், திருமணமான 6 மாதத்தில் ‘வெள்ளையனே வெளியேற இயக்க’ (Quit India Movement) போராட்டத்தில் பெரோஸ் – இந்திரா காந்தி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது பெரோஸ் காந்தி ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதற்கடுத்த சில ஆண்டுகள் இந்த தம்பதியருக்கு ராஜிவ் (1944) – சஞ்சய் (1946) என இரண்டு மகன்கள் பிறந்தனர்.

சுதந்திரத்திற்கு பிறகு, நேரு இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக தேர்வானார். பெரோஸ் – இந்திரா காந்தி அலகாபாத்-ல் தங்களது இரண்டு மகன்களுடன் வசித்து வந்தனர். அலகாபாத்-ல் நேருவின் தி நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை பெரோஸ் காந்தி நடத்தி வந்தார். 1952ல் நடந்த இந்தியாவின் முதல் பொது தேர்தலில் Raebareli தொகுதியில் போட்டியிட்டு வென்ற பெரோஸ் காந்தி, தனது மாமனாரான நேருவின் அரசுக்கு எதிராக ஊழலை எதிர்த்து போராட துவங்கினர். நிறைய இந்திய தொழில்கள் அரசியல் தலைவர்கள் வசம் சென்றடைவதாக அவர் குற்றம் சாட்டி வந்தார். 1957ம் ஆண்டு பொது தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் நின்று வென்றார் பெரோஸ் காந்தி.

பெரோஸ் காந்திக்கு 1958ம் ஆண்டு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது . பெரோஸ் காந்தியின் மறைவின் போது இந்திரா காந்தி தனது தந்தையான நேரு வீட்டில் (இந்திய பிரதமர் இல்லம்) தங்கி இருந்தார். பிரதமர் நேரு அச்சமயத்தில் பூட்டன் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். பிறகு, இந்திரா காந்தி பெரோஸ்-ஐ அருகில் இருந்து கவனித்து வந்தார். 1960ல் ஏற்பட்ட இரண்டாவது மாரடைப்பு காரணத்தால் பெரோஸ் மரணம் அடைந்தார். பெரோஸ் காந்தி போட்டியிட்டு வென்ற Raebareli தொகுதியில் 1967, 1976ல் இந்திரா காந்தியும், 2004ம் ஆண்டு முதல் தற்போது வரை மருமகளான சோனியா காந்தியும் போட்டியிட்டு வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!