நீட் நுழைவுத் தேர்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்டப்படி ஜூலை 17–ந்தேதி நடைபெறும்!

நீட் நுழைவுத் தேர்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்டப்படி ஜூலை 17–ந்தேதி நடைபெறும்!

ந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடைபெற்று வருகிறது.

நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. 2022–2023ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ஜூலை 17–ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. நீட் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

ஒரே தேதியில் பல்வேறு தேர்வுகள் நடப்பதாக சமூக தளங்களில் மாணவர்கள் பதிவிட்டிருந்தனர். நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என நாடெங்குமிருந்து கோரிக்கைகள் வந்த நிலையில், இது குறித்து தேசிய தேர்வு முகாமை விளக்கம் அளித்துள்ளது. திட்டமிட்டப்படி ஜூலை 15ந்தேதி கியூட் தேர்வும், நீட் தேர்வு ஜூலை 17–ந்தேதியும், ஜூலை 21ம் தேதி ஜி மெயின் தேர்வும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

error: Content is protected !!