வேண்டாத சர்ச்சையைக் கிளப்பிய கேரள பிரபல திருமணம்!

வேண்டாத சர்ச்சையைக் கிளப்பிய கேரள பிரபல திருமணம்!

ம்மாளுங்களுக்கு என்ன தான் பிரச்சனை? விவாகரத்து பெற்று இரண்டு பிள்ளைகளுடன் வாழும் 42 வயது பெண் மீது சில ஆண்டுகள் மூத்தவரான ஒருவருக்கு காதல் பிறக்கிறது.திருமணமாகாத அவர் தன் காதலை சொல்கிறார். அந்தப் பெண்ணும் ஏற்றுக் கொள்கிறார். குடும்பங்களும் ஏற்றுக் கொள்கின்றன. தாயின் மறுமணத்துக்கு புத்தி தெரிந்த பிள்ளைகளும் பச்சைக்கொடி காட்டுகின்றன.கேரளாவில் தொலைக்காட்சி பிரபலங்கள் இருவருக்கிடையே இப்படித்தான் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

சமூக வலைத்தள வாசிகள் மனதில் பிரச்சனை எங்கு வெடிக்கிறது என்று பார்த்தால் அநேகமாக மணமகனின் தோற்றம் ஆகத்தான் இருக்கும்.கண்ணாடி.. தாடி.. போன்றவை வயதை கூட்டி சொல்ல, அவர் ஒரு தொண்டு கிழவன் மாதிரியும் இளம் பெண்ணை ஏமாற்றி கல்யாணம் செய்து கொள்வது மாதிரியும் பொங்குகிறார்கள்.ஆனால் இந்த மணமகனை விட சினிமா இந்தி ஸ்டார்களா உள்ள கான்களுக்கு எல்லாம் 10 வயதுக்கு மேல் அதிகமாக இருக்கும்..!

செக்கச்செவேல்னு 25 வயசு பையனும் தங்க செல மாதிரி 25 வயசு பொண்ணு தங்கச்சிலை மாதிரி இருக்குற 25 வயசு பொண்ணும் கல்யாணம் பண்ணிக்கிட்டு அடுத்த ஆறு மாசத்துல டைவர்ஸ் வர்றாங்களே?இத்தனைக்கும் நல்ல படிப்பு, நல்ல வேலை செல்வச் செழிப்புன்னு எல்லாம் இருந்தும் இளமையா அவங்களுக்கு அப்படியே திருப்தியா வாழ்க்கையை வாரி கொடுத்து விடுகிறதா?

திருமணத்துக்குப் பிந்தைய வாழ்க்கை எப்படி போகும் என்பது இருவருக்குமே அமைந்த பிறகுதான் தெரியவருமே தவிர, 100% முன்கூட்டியே கணித்து விட முடியாது. அது இரு மனங்களின் அன்யோன்யம் சம்பந்தப்பட்டது. படிப்பு, அறிவு, பணம் ஜாதி, மதம், வயது என எல்லாத்துக்கும் அப்பாற்பட்டது.

ஏழுமலை வெங்கடேசன்

Related Posts

error: Content is protected !!