காற்றின் மொழி- பாடல் எழுதும் போட்டி – தேர்வானவர்களுடன் ஒரு கலந்துரையாடல்!
![காற்றின் மொழி- பாடல் எழுதும் போட்டி – தேர்வானவர்களுடன் ஒரு கலந்துரையாடல்!](https://www.aanthaireporter.in/wp-content/uploads/2018/10/0-12.jpg)
பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பாளர் கோ. தனஞ்ஜெயன் , S. விக்ரம் குமார் , லலிதா தனஞ்ஜெயன் தயாரிப்பில் , ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ காற்றின் மொழி “ இப்படத்தை ராதாமோகன் இயக்கியுள்ளார். விரைவில் வெளியாகவுள்ள காற்றின் மொழி படத்தின் படக்குழு அண்மையில் கடந்து சென்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு “ காற்றின் மொழி பாடல் எழுதும் போட்டியை ” அறிவித்து இருந்தது.
பாடல் எழுத தெரிந்தவர்கள் , சினிமாவில் பாடல் எழுதுவதை கனவாக கொண்டவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களுடைய திறமையை வெளிக்காண்பிக்க பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் சிறந்த பாடல்கள் இரண்டை எழுதுபவர்கள் மதன் கார்க்கி தேர்ந்தெடுத்து அப்ப்டி. தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பாடல்களும் மக்கள் முன்னால் பாடப்பட்டு எழுதியவர் களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் தமிழகம் முழுவதிலுமிருந்து 700 பேர் பங்கேற்று இருந்தார்கள். அவர்களிலிருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட 66 பேர் காற்றின் மொழி பாடல் எழுதும் போட்டி சார்ந்த ஒரு திடீர் விழாவில் பங்கேற்றனர். இதில் பாடலாசிரியர் மதன் கார்க்கி , இயக்குனர் ராதாமோகன் உள்ளிட்ட ஜாம்பவான்கள் பங்கேற்று பேசினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் படத்தின் பாடல் சிடி வழங்கப்பட்டது. மேலும் சிறப்பாக பாடல் எழுதிய இருவருக்கு பரிசு வழங்கப்பட்டது. பாடலாசிரியர் மதன் கார்க்கி எல்லோரிடமும் தான் காற்றின் மொழி படத்துக்கு பாடல் எழுதிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
பாப்டா நிறுவனம் சார்பாக G. தனஞ்ஜெயன் தயாரித்து , ஜோதிகா நடித்து , ராதா மோகன் இயக்கியுள்ள காற்றின் மொழி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.