அமெரிக்கா : புதிய அதிபராக ஜோ பைடன் + துணை அதிபராக கமலா ஹாரிஸ் பொறுப்பேற்பு!

அமெரிக்கா : புதிய அதிபராக ஜோ பைடன் + துணை அதிபராக கமலா ஹாரிஸ் பொறுப்பேற்பு!

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன்  பதவி ஏற்றார். அவருக்கு பதவிப் பிரமானமும், ரகசியகாப்பு பிரமானமும் செய்துவைக்கப்பட்டது. அவருக்கு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் இந்திய வம்சா வளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸும் துணை அதிபராகப் பொறுப்பேற்றார். இதன்மூலம், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அமெரிக்காவில் அதிபராகப் பதவியேற்கும் இரண்டாவது கத்தோலிக்க கிறிஸ்துவர் ஜோ பைடன். பைடன் குடும்பத்தைச் சேர்ந்த 127 ஆண்டுப் பழைமையான பைபிளை வைத்துப் பதவியேற்றார் ஜோ. இந்த விழாவில் தேர்தலில் தோற்ற டொனால்ட் டிரம்ப் பங்கேற்கவில்லை. 1869-க்குப் பிறகு இப்போதுதான், முதல் முறையாகப் புதிய அதிபர் பதவியேற்பில் முந்தைய அதிபர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் பெரியண்ணா என்று சொல்லப்படும் அமெரிக்காவில் 290 பிரதிநிதிகளின் வாக்குகளைப்பெற்று அதிபர் மாளிகையில் அடியெடுத்து வைத்தார் ஜோ பைடன். 77 வயதாகும் ஜோ படைன் அமெரிக்க வரலாற்றில் மிகவும் வயதான அதிபர் என்ற பெருமைக்குரியவர். ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் தற்போதை துணை அதிபர் மைக் பென்ஸ் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், ஒபாமா ஆகியோர் பங்கேற்றனர்.

2009-ல் ஒபாமா பதவி ஏற்ற போது சுமார் 20 லட்சம் பேர் பதவி ஏற்பு விழாவிற்கு வந்ததாக கருதப்படுகிறது. தற்போது கொரோனா காரணமாக பதவி ஏற்பு விழாவை காண 1,000 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பதவி ஏற்பு விழாவை காண சுமார் 2 லட்சம் டிக்கெட்டுகள் வரை வழங்கப்பட்டு வந்தன.

ஜோ பைடன் பதவி ஏற்பு விழாவில் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 25,000 வீரர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜனவரி 6-ம் தேதி நாடாளுமன்றத்திற்குள் டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் டிரம்ப் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலால் அவசர நிலையில் அமலில் உள்ளது. ஜோ பைடனின் பதவி ஏற்பு விழாவை புறக்கணித்து விட்டு நேற்று மாலையில் புளோரிடாவில் உள்ள பண்ணை வீட்டிற்கு சென்று விட்டார் டிரம்ப்.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் அதிபர் ஜோ பைடன் பேசியது:-

மக்களின் விருப்பம் கேட்கப்பட்டு, அவர்களின் விருப்பத்திற்கு கவனிக்கப்பட்டுள்ளது. ஜன நாயகத்திற்கான காரணம் இன்று கொண்டாடப்படுகிறது. அமெரிக்கா புதிதாக சோதனை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா சவாலுக்கு உயர்ந்துள்ளது. இது ஜனநாயகத்தின் நாள்.. இது வரலாறு மற்றும் நம்பிக்கையின் நாள்.. புதுப்பித்தல் மற்றும் தீர்வுகளுக்கான நாள். இது அமெரிக்காவின் நாள். ஒரு வேட்பாளராக அல்லாமல் ஜனநாயகம் காரணமாக இன்று நாம் வெற்றியை கொண்டாடுகிறோம்

மக்களின் விருப்பம் கேட்கப்பட்டுள்ளது, மக்களின் விருப்பம் கவனிக்கப்படுகிறது. ஜனநாயகம் விலைமதிப்பற்றது என்பதை நாங்கள் மீண்டும் கற்றுக்கொண்டோம் ஜனநாயகம் உடையக் கூடியது. என் நண்பர்களே இந்த நேரத்தில் ஜனநாயகம் மேலோங்கியுள்ளது. ஒவ்வொரு தேசபக்தர்கள் மீதும் புனித சத்தியம் செய்கிறேன். சத்தியம் முதலில் வாஷிங்டன் செய்யப் பட்டது. ஆனால் அமெரிக்கக் கதை நம்மில் யாரையும் சார்ந்தது அல்ல, நம்மில் சிலரை அல்ல, நம் அனைவரையும் சார்ந்துள்ளது. மக்களாகிய நாம் ஒரு முழுமையான ஒற்றுமையை நாடுகிறோம். இது ஒரு சிறந்த தேசம். நாம் அனைவரும் நல்லவர்கள்.

நமது அனைத்து அரசியல் கட்சியினர் அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அமெரிக்காவை ஒன்றாகக் கொண்டுவருதல், நம் மக்களை ஒன்றிணைத்தல், நம் தேசத்தை ஒன்றுபடுத்துதலில் ஜனவரி நாளான இன்று எனது முழு ஆத்மாவும் இதில் உள்ளது. நம்மை பிளவுபடுத்தும் சக்திகள் ஆழமானவை மட்டுமல்லாமல் உண்மையானவை. ஆனால், இது புதிதல்லா என்பது எனக்கு தெரியும்.

அமெரிக்காவின் லட்சியமான நாம் அனைவரும் சமமாக உருவாக்கப்பட்டுள்ளோம் என்பதற்கும் கசப்பான உண்மையான இனவெறி, இருப்பிடவெறி, பயம் ஆகியவைக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்சனை நிலவி வருகிறது. எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கும், ஆதரவு அளிக்காதவர்களுக்கும் என அனைவருக்கும் நான் போராடப்போகிறேன். நான் அமெரிக்கர்கள் அனைவருக்குமான அதிபராக இருப்பேன்.

Related Posts

error: Content is protected !!