‘இரும்புத்திரை’ படத்தின் புரமோஷனுக்காக நடந்த’ ஐ.டி’ ரெய்டு!

‘இரும்புத்திரை’ படத்தின் புரமோஷனுக்காக நடந்த’ ஐ.டி’ ரெய்டு!

மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ மற்றும் புதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகும் ‘இரும்புத்திரை’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் விஷால். ‘இரும்புத்திரை’ படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. முன்னதாக இப்படம் டிஜிட்டல் குற்றங்களான ஏ.டி.எம் மெஷின் கொள்ளை மற்றும் மோசடி உள்ளிட்டவற்றை மையப்படுத்தி திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் மித்ரன். இக்கதையைக் கேட்ட அடுத்த நொடியே, கண்டிப்பாக நான் நடிக்கிறேன் என்று தெரிவித்து  தானே தயாரிப்பதாகக் கூறி கிராண்டாக பூஜை போட்டு    இருந்தார் விஷால்.

இதையடுத்து  சமந்தா நாயகியாக நடித்துவரும் இப்படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். விஷால் நாயகனாக நடித்து, தயாரித்து வருகிறார். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் வில்லனாக முதலில் ஆர்யா நடிக்கவிருந்தார். தற்போது ஆர்யாவுக்கு பதிலாக அர்ஜூன் நடித்து வருகிறார் என்பதெல்லாம்  பழைய தகவல்..

இதனிடையே போன மாசம் விஷால் அலுவலகத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தியதோடு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த டிடிஎஸ் பணமான ரூ.50 லட்சத்தை முறையாக செலுத்தாதது கண்டு பிடிக்கப்பட்டது. அது குறித்து விஷால் நேரடி விலாக்கமளிக்க நோட்டிஸ் அனுப்பப்பட்டது. ஆனால் விஷாலுக்குப் பதிலாக அவருடைய ஆடிட்டர் விளக்கமளித்தார். மேலும் அந்த தொகையை இரண்டு மூன்று தவணையாக கட்டிவிடுவதாக உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த விவகாரம் முடிவுக்கு வந்தது. ஆனால் இந்த ரெய்டுக்கு காரணம் விஷால் ஆளும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான விவசாயிகள் பிரச்சினை, கந்துவட்டி, குழந்தைகள் மரணம் என்று பல சமூக பிரச்சினைகள் குறித்து கருத்துக்கள் கூறுவது தான் என்று பேசப்பட்டது.

அதே சமயம் நாளை திரைக்கு வர இருக்கும் ‘ தீரன் அதிகாரம் ஒன்று ‘ ரிலீஸூக்காக நடந்த திரைப்பட விழா ஒன்றில் பேசிய நடிகர் கார்த்தி, “விரைவில் நடிகர் விஷால் அரசியலுக்கு வருவர்” என்று கருத்து தெரிவித்திருந்த நிலையில் நடிகர் விஷால் கட்டுக் கட்டாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளுடன் பிடிபட்டுள்ள வீடியோ காட்சி வலைதளங்களில் பரவிவந்தது. இதைப்பற்றி விசாரித்தபோது, இரும்புத்திரை படத்தின் புரமோஷனுக்காக வேண்டுமென்றே படக்குழு செய்த காரியம் இதுவென்று தெரியவந்தது.

இந்த விஷால், சமந்தா நடிப்பில் இரும்புத்திரை படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு அக்டோபர் 29 தேதி ஆரம்பித்தது. அந்த படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி தற்போது சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படப்பிடிப்பு தளத்தில்தான் அந்த ரூபாய் நோட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டதை அந்த வீடியோ காட்சி தெளிவுபடுத்தியுள்ளது. 51 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ பதிவின் முதல் 30 வினாடிகள் விஷால் பெரும் தொகையுடன் வருமான வரித் துறை அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டது போன்று நாம் அனைவரையும் நம்ப வைத்தாலும் அதன் பின்னர் அந்த பதிவில் நடிகர் அர்ஜுன் குறுக்கிடும்போது தான் அது ஒரு பிராங்க் வீடியோ என்று உணரமுடிகிறது.

 

இந்த வீடியோ குறித்து விஷால் தரப்பில்,“இந்த வீடியோ இரும்புத்திரை படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டது. மற்றபடி எதுவுமில்லை” என்று கூறினார். விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இரும்புத்திரை படத்தை அடுத்த ஆண்டு (2018) பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளதால் விரைவில் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!