பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக சுமார் 31 ஆயிரம் புகார்கள்!

பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக சுமார் 31 ஆயிரம் புகார்கள்!

ந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தேசிய மகளிர் ஆணையத்தின் தரவுகள் உறுதிப்படுத்தி உள்ளன. அந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டில் நாடு முழுவதிலும் இருந்து 30 ஆயித்து 864 புகார்கள் பெறப்பட்டு இருப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது. இது கடந்த 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகவும் அதிகம் என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்து உள்ளது. அந்த ஆண்டில் மொத்தம் 33 ஆயிரத்து 906 புகார்கள் பதிவாகி இருக்கிறது. 2020ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2021ஆம் ஆண்டில் பதிவான புகார்கள் 30 சதவீதம் அதிகம் எனவும் 2020ஆம் ஆண்டில் 23 ஆயிரத்து 722 புகார்கள் மட்டுமே பதிவாகி இருந்தது.

உத்தரபிரதேசத்தில் மட்டும் 15 ஆயிரத்து 828 புகார்கள் பதிவாகி உள்ளது. அடுத்ததாக டெல்லியில் 3 ஆயிரத்து 336 புகார்களும் மராட்டியத்தில் 1,504 புகார்களும் அரியானாவில் 1,460 புகார்களும் பீகாரில் 1,456 புகார்களும் பதிவாகி உள்ளன.

மொத்த புகார்களில், 11 ஆயிரத்து 13 பெண்களின் கண்ணியத்துக்கு எதிரான உரிமை மீறல் புகார்கள், குடும்ப வன்முைற புகார்கள் 6 ஆயிரத்து 633, வரதட்சணை கொடுமை புகார்கள் 4 ஆயிரத்து 589 என அதிக அளவில் பதிவாகி உள்ளன.

கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 3 ஆயிரத்து 100க்கு மேற்பட்ட புகார்கள் வந்திருப்பதாக ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு ஒருபுறம் இருந்தாலும் மகளிர் ஆணையத்தின் செயல்பாடு தொடர்பான விழிப்புணர்வுகளும் இந்தப் புகார்கள் அதிகரிப்பதற்கு காரணம் என தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா சமீபத்தில் கூறியிருந்தார்.

error: Content is protected !!