இந்திய நகரங்களில் சென்னை முதல் இடம்பெற விருப்பமா? அப்ப இதைப் படிங்க!

இந்திய நகரங்களில் சென்னை முதல் இடம்பெற விருப்பமா? அப்ப இதைப் படிங்க!

ம் சென்னை உள்பட நாட்டின் சகல நகரங்களும் காற்று மாசுபாட்டில் தொடங்கி நீர், நிலம் என வெவ்வேறு விதங்களில் சுற்றுச்சூழல் சிக்கல்களை சந்திக்கிறது. மறுபுறம் நகரின் பரப்பளவு புறநகர்ப் பகுதிகளை இணைத்துக் கொண்டு விரிவடைந்து கொண்டே செல்கிறது. புதிய கட்டிடங்கள், தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகள், பொழுதுபோக்கு அம்சங்கள், மால்கள், ஓட்டல்கள் என வந்து கொண்டே இருக்கின்றன. தனி நபர் வாகனப் பயன்பாடு விண்ணை முட்டும் அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது. இப்படியான சூழல் எந்த மாநகருக்கும் நல்லதல்ல. காற்று மாசுபாடு அளவில் Moderate எனப்படும் சுமாரான நிலையை தான் பெற்றிருக்கிறது. இது வருங்காலங்களில் மிக மோசமான நிலையை அடைய அதிக வாய்ப்புள்ளது. இப்படியான சூழலில் நகரங்களை மீட்டெடுக்க புதிய திட்டங்கள் தேவைப்படுகின்றன.

இதற்காக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் புதிய ஏற்பாட்டை செய்துள்ளது. இதற்கு EASE OF LIVING 2022 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதாவது, Citizen Perception Survey எனப்படும் குடிமக்களின் பார்வையில் அந்தந்த நகரைக் குறிப்பிட்டு (https://eol2022.org/CitizenFeedback%2c) ஆன்லைனில் கருத்துக்கணிப்பு நடத்த முடிவு செய்துள்ளது.

என்னென்ன விவரங்கள்?

இதில் பதிவு செய்யப்படும் விவரங்கள் மாநகராட்சியை நேரடியாக சென்றடையும். மேலும் மாநகராட்சி மேம்பட்ட திட்டத்தை உருவாக்க மத்திய அரசுக்கு உதவிகரமாக இருக்கும். இந்த ஆன்லைன் கருத்துக்கணிப்பில் மாநகரில் சாலைகள் எப்படி இருக்கின்றன? கழிவுநீர் வடிகால்களின் நிலை என்ன? மாசுபாடு? பாதுகாப்பு? வாடகைக்கு வசிக்கிறீர்களா? இல்லை சொந்த வீடா? நகரில் வசிக்கும் போது சராசரியாக எவ்வளவு செலவாகிறது? வேலைவாய்ப்பு? சுகாதார வசதிகள்? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்படுகின்றன. நாட்டின் எல்லா நகரங்களுக்கும் கருத்துக்கணிப்பு இந்த நடத்தப்படுகிறது. இவை அனைத்தும் முடிவடைந்த பிறகு, எந்த நகரம் வாழ்வதற்கு ஏற்றது என்ற தலைப்பில் மத்திய அரசு பட்டியல் ஒன்றை வெளியிடும். இது குடிமக்களுக்கு மட்டுமின்றி அரசு தரப்பிற்கும் பெரிதும் உதவிகரமாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், சென்னை மாநகராட்சி ஏற்கனவே சிறந்த வாழ்விடங்களின் பட்டியலில் முன்னிலையில் தான் இருக்கிறது. இதனை கடந்த கால தர வரிசை பட்டியல்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஆனால் அதிகப்படியான குடிமக்கள் தங்கள் கருத்துகளை ஆன்லைனில் பதிவு செய்யாத சூழல் ஏற்படும் போது உங்கள் நகரம் பின்னடைவை சந்திக்கிறது. இதுபோன்ற சூழல்களில் குறைந்த உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட நகரங்கள் முன்னிலை பெற்று விடுகின்றன. எனவே சென்னை மாநகராட்சி குறித்து கருத்து தெரிவிக்க அனைத்து சென்னைவாசிகளும் முன்வர வேண்டும் என சென்னை மாநகராட்சி மேயர் கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக மிடில் கிளாஸ் மக்களின் மனநிலையே ஒரு நகரின் உண்மை நிலையை எடுத்துரைக்கும் எனச் சொல்லப்படுவது உண்டு. அந்த வகையில் மிடில் கிளாஸ் மக்கள் அதிக அளவில் ஆன்லைனில் கருத்து தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அரசு எடுக்கும் இந்திய நகரங்களில் சென்னை முதல் இடம்பெற நீங்களும் இந்த சர்வேவை எடுக்கலாம். எப்படி என்பதை மேலே உள்ள  வீடியோவில் காணலாம்..

Link: http://eol2022.org/CitizenFeedback

error: Content is protected !!