மகாராஷ்டிரா வங்கியில் வேலைவாய்ப்பு!

மகாராஷ்டிரா வங்கியில் வேலைவாய்ப்பு!

பொதுத்துறையை சேர்ந்த மகாராஷ்டிரா வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

காலியிடம்:

பொது அதிகாரி ஸ்கேல் II பிரிவில் 400, பொது அதிகாரி ஸ்கேல் III பிரிவில் 100 என மொத்தம் 500 இடங்கள் உள்ளன.

வயது :

31.12. 2021 அடிப்படையில் பொது அதிகாரி ஸ்கேல் II பிரிவுக்கு 25 – 35, மற்ற பதவிக்கு 25 – 38 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு அல்லது சி.ஏ., / சி.எம்.ஏ., / சி.எப்.ஏ., படிப்பு முடித்திருக்க வேண்டும்.

அனுபவம் :

ஸ்கேல் II பிரிவுக்கு 3 ஆண்டு, ஸ்கேல் III பிரிவுக்கு 5 ஆண்டு பணி அனுபவம் அவசியம். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை :

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம் :

தமிழகத்தில் சென்னை மட்டும். எழுத்துத்தேர்வு 12.3.2022ல் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.1180 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.118 பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் :

22.2.2022

விபரங்களுக்கு :

ஆந்தை வேலைவாய்ப்பு

error: Content is protected !!