பி.எட்.சிறப்பு கல்வி பட்டப்படிப்பு: 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

பி.எட்.சிறப்பு கல்வி பட்டப்படிப்பு: 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

மிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் 2008-ம் ஆண்டில் இருந்து பி.எட். சிறப்பு கல்வி பட்டப் படிப்பை தொலைநிலை வாயிலாக வழங்கி வருகிறது. இந்த படிப்பை வழங்கி வரும் 2 பல்கலைக்கழகங்களில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகமும் ஒன்று.

இங்கு வழங்கப்படும் பட்டம் பி.எட். (பொது) பட்டத்துக்கு இணையானது. இவர்கள் அரசு பொது மற்றும் சிறப்பு பள்ளிகள், தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற முடியும்.

அந்த வகையில், 2024-ம் ஆண்டு பி.எட் சிறப்பு கல்வி பட்டப்படிப்பு சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு வருகிற 20-ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் https://tnou.ac.in/prospectus-bed.php என்ற பல்கலைக்கழக இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்க கையேடுகளைப் பார்க்கலாம்.

மேலும், இதுதொடர்பான விவரங்களுக்கு 044-24306617 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!