ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ. 3 கோடி பரிசு!

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ. 3 கோடி பரிசு!

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார், 18,000 வீரர்களில் 10 ஆயிரம் பேர் தடுப்புசி போட்டுக்கொண்ட நிலையில் மீதி உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுகிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 6 விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ. லட்சம் ஊக்கத்தொகையும் முதல்-அமைச்சர் வழங்கியுள்ளார்.

அந்நிகழ்ச்சியின் போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ”விளையாட்டு போட்டியில் “டீம் ஸ்பிரிட்” மிக முக்கியமானது. உடலுக்கும், மனதுக்கும் ஊக்கம் தரும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு உடல் உறுதியும் ஊக்கமும் அவசியம். விளையாட்டு வீரர்கள் அடுத்த தலைமுறைக்கு ஊக்கம் தரக்கூடியவர்கள். தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு தமிழக அரசுப் பணி வழங்கப்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கருவிகள், பயண சீட்டு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் 7 தமிழக வீரர்- வீராங்கனைகள் பங்கேற்கின்றனர் என்பதில் பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

ஏற்கனவே ஒரு வீராங்கனைக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்ட நிலையில் மற்ற 6 பேருக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும். தமிழ்நாட்டில் 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டது. திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். விளையாட்டுக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்தால் அமெரிக்கா போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளும் நாட்கள் தொலைவில் இல்லை.

மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு வீட்டுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ. 3 கோடி பரிசு வழங்கப்படும். ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வெல்வோருக்கு ரூ. 2 கோடி, வெண்கலம் வென்றால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

error: Content is protected !!